'பெண்களுக்குப் பாதுகாப்பற்ற ஆக மோசமான பெருநகரம் புதுடெல்லி'

'பெண்களுக்குப் பாதுகாப்பற்ற ஆக மோசமான பெருநகரம் புதுடெல்லி'

2 mins read
32552e1d-cac9-4eed-95ec-b54522dea955
-

புது­டெல்லி: நாட்­டின் தலை­ந­கர் புது­டெல்­லி­யில் சென்ற ஆண்டு சரா­ச­ரி­யாக அன்­றா­டம் மூன்று பாலி­யல் பலாத்­கா­ரச் சம்­ப­வங்­கள் பதி­வா­ன­தாக தேசிய குற்­றப் பதி­வு­கள் அலு­வ­ல­கம் தெரி­வித்­துள்­ளது. இவற்­றில் இரண்டு சம்­ப­வங்­களில் 18 வய­துக்­கும் குறை­வான சிறு­மி­கள் துன்­பு­றுத்­தப்­பட்­ட­னர்.

இந்­தி­யா­வின் 19 பெரு­ந­க­ரங்­களில் குற்­றப் பதி­வு­க­ளைக் கணக்­கிட்­ட­தில் புது­டெல்­லி­யில் ஆக அதிக எண்­ணிக்­கை­யில் பெண்­கள் பாலி­யல் கொடு­மைக்கு ஆளா­ன­தா­கத் தெரி­ய­வந்­துள்­ளது.

தொடர்ந்து மூன்­றா­வது ஆண்­டாக, பெண்­க­ளுக்கு எதி­ரான குற்­றச்­செ­யல்­கள் நடை­பெ­றும் பெரு­ந­க­ர­மாக புது­டெல்லி வகைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

சென்ற ஆண்டு இத்­த­கைய 13,892 குற்­றச்­செ­யல்­கள் பதி­வா­யின. அதற்கு முந்­தைய ஆண்­டை­விட இந்த எண்­ணிக்கை 40 விழுக்­காட்­டுக்­கும் அதி­கம்.

புது­டெல்­லி­யில் சென்ற ஆண்டு பதி­வான ஒட்­டு­மொத்­தக் குற்­றச்­செ­யல்­களில் 32.20 விழுக்­காட்­டுச் சம்­ப­வங்­கள் பெண்­க­ளுக்கு எதி­ரா­னவை என்று தக­வல்­கள் கூறு­கின்­றன.

பெண்­கள் கடத்­தப்­ப­டு­தல், மானபங்கப்படுத்தப்படுதல், கண­வ­னால் கொடு­மைப்­ப­டுத்­தப்­ப­டு­தல், பாலி­யல் வன்­கொ­டு­மைக்கு ஆளா­கும் சிறு­மி­கள், வர­தட்­ச­ணைக் கொடுமை தொடர்­பான உயி­ரி­ழப்பு­கள் ஆகிய பிரி­வு­க­ளி­லும் புது­டெல்­லி­யில் ஆக அதி­கக் குற்­றச்­செ­யல்­கள் பதி­வா­யின.

பெண்­க­ளுக்­குப் பாது­காப்பு குறை­வாக இருக்­கும் பெரு­ந­க­ரங்­கள் பட்­டி­ய­லில் புது­டெல்­லிக்கு அடுத்து இரண்­டா­வது நிலை­யில் உள்­ளது மும்பை. சென்ற ஆண்டு அங்கு 5,543 குற்­றச் செயல்­கள் பதி­வா­யின.

மூன்­றா­வது நிலை­யில் உள்­ளது பெங்­க­ளூரு. அங்கு 2021ல் 3,127 குற்­றச்­செ­யல்­கள் பெண்­க­ளுக்கு எதி­ராக நடை­பெற்­ற­தா­கக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

மொத்­த­முள்ள 19 பெரு­ந­க­ரங்­களி­லும் நடந்த ஒட்­டு­மொத்த இத்­த­கைய குற்­றச்­செ­யல்­களில் மும்­பை­யில் பதி­வா­னவை 12.76 விழுக்­காடு. பெங்­க­ளூ­ரில் பதி­வா­னவை 7.2 விழுக்­காடு என்று தேசிய குற்றப் பதிவுகள் அலுவலகத் தகவல்கள் கூறின.