ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சலால் 2,000 பன்றிகள் மாண்டன

ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சலால் 2,000 பன்றிகள் மாண்டன

1 mins read
24a7008a-c581-4a4a-b013-4c650397a539
-

ரேவா: மத்­தி­யப் பிர­தேச மாநி­லம் ரேவா நக­ரில் ஆப்­பி­ரிக்­கப் பன்றிக் காய்ச்­சல் பர­வி­ய­தால் ஏறக்­கு­றைய 2,000 பன்­றி­கள் மாண்­டு­விட்­டன. இதை­ய­டுத்து அம்­மா­நி­லத்­தில் பன்றி இறைச்சி வாங்­கவோ விற்­கவோ கூடாது எனத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது. இரண்டு வாரங்­க­ளுக்கு முன்­னர் பன்­றி­கள் அடுத்­த­டுத்து இறந்த நிலை­யில் அவற்­றின் உடல்­மா­தி­ரி­கள் கால்­நடை நோய் ஆய்வு நிலை­யத்­தில் சோதிக்­கப்­பட்­டன. ரேவா நக­ரில் தற்­போது இருக்­கும் 25,000க்கும் மேற்­பட்ட பன்­றி­க­ளுக்­குத் தடுப்­பூசி போடும் பணி­களை அதிகாரி­கள் முடுக்­கி­விட்­டுள்­ள­னர்.