புதுடெல்லி: நாட்டின் முதல் மெய்நிகர் பள்ளியை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று தொடங்கி வைத்தார்.
பள்ளிக்கு வர இயலாத மாணவர்கள், தொலைதூரத்தில் இருந்து பள்ளி செல்லும் மாணவர்கள் ஆகியோரைக் கருத்தில்கொண்டு இத்தகைய பள்ளியை அறிமுகம் செய்வதாக அவர் கூறினார். டெல்லி பாடத்திட்டத்தின்கீழ் இயங்கும் இப்பள்ளியில் நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தும் மாணவர்கள் பயிலலாம்.

