பங்ளாதேஷுடன் பொருளியல் பங்காளித்துவம்

பங்ளாதேஷுடன் பொருளியல் பங்காளித்துவம்

2 mins read
b20eda40-153f-4881-91bd-46831daa3c71
-

புது­டெல்லி: இந்­தி­யா­வும் பங்­ளா­தேஷும் விரி­வான பொரு­ளி­யல் பங்­கா­ளித்­துவ உடன்­ப­டிக்கை தொடர்­பில் அதி­கா­ர­பூர்வ பேச்­சு­வார்த்­தை­யைத் தொடங்க இணங்­கி­யுள்­ளன.

பங்­ளா­தே­ஷின் பிர­த­மர் ஷேக் ஹசீ­னா­வின் இந்­தி­யப் பய­ணத்­தின்­போது நேற்று இவ்­வாறு இணக்­கம் காணப்­பட்­டது. இரு­த­ரப்பு வர்த்­தக, எரி­சக்­தித் தொடர்­பு­களை வலுப்­படுத்­து­வது நோக்­கம்.

பயங்­க­ர­வா­தம், தீவி­ர­வா­தம் ஆகி­ய­வற்­றுக்கு எதி­ரான ஒத்­து­ழைப்பை வலுப்­ப­டுத்­த­வும் இரு நாட்­டுத் தலை­வர்­களும் உறு­தி­ய­ளித்­த­னர்.

இந்­தி­யப் பிர­த­ம­ரா­கத் திரு நரேந்­திர மோடி இருக்­கும்­வரை இரு­த­ரப்­புக்­கும் இடை­யி­லான பிரச்­சி­னை­க­ளுக்­குத் தீர்­வு­காண்­பது எளிது என்­றார் திரு­வாட்டி ஹசீனா,

குஷி­யாரா நதி நீரின் பங்­கீடு தொடர்­பில் இரு நாடு­களும் உடன்­ப­டிக்கை ஒன்­றில் கையெ­ழுத்­திட்­டதை அடுத்து பங்­ளா­தேஷ் பிர­த­மர் இவ்­வாறு கூறி­னார்.

இரு­த­ரப்­புக்­கும் இடை­யில் 25 ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு இத்­த­கைய ஒப்­பந்­தம் எட்­டப்­பட்­டுள்­ளது. முன்­ன­தாக 1996ஆம் ஆண்டு கங்கை நீர் ஒப்­பந்­தம் கையெ­ழுத்­தா­னது.

இரு பிர­த­மர்­க­ளின் சந்­திப்­பில் மொத்­தம் ஏழு உடன்­ப­டிக்­கை­கள் கையெ­ழுத்­தா­யின. மூன்று ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு முதல்­மு­றை­யாக, திரு­வாட்டி ஹசீனா புது­டெல்­லிக்கு நான்கு நாள் அதி­கா­ரத்­து­வப் பய­ணம் மேற்­கொண்­டுள்­ளார்.

இந்­நி­லை­யில், பங்ளாதேஷ் சுதந்­தி­ரப் போரின்­போது உயி­ரி­ழந்த இந்­திய ராணுவ வீரர்­க­ளின் வாரிசு­க­ளுக்கு அவர் உத­வித்­தொகை வழங்­கி­னார். அந்­தப் போரில் உயி­ரி­ழந்த இந்­திய வீரர்­க­ளுக்கு மரி­யாதை செலுத்­து­வ­தா­கக் கூறிய அவர், "பங்­ளா­தே­ஷின் விடு­தலை, இறை­யாண்மை ஆகி­ய­வற்­றுக்­காக உயிர்த் தியா­கம் செய்த இந்­திய சகோ­த­ரர்­களை நினை­வு­கூர்­வது எங்­க­ளுக்கு கௌர­வம்," என்று கூறி­னார்.

பங்­க­பந்து ஷேக் முஜி­புர் ரகு­மான் பெய­ரில் வழங்­கப்­படும் உத­வித்­தொ­கையை, இந்­திய வெளி­யு­றவு அமைச்­சர் ஜெய்­சங்­க­ரு­டன் இணைந்து திரு­வாட்டி ஹசீனா மாண­வர்­க­ளுக்கு வழங்­கி­னார்.

முன்­ன­தாக இந்­திய அதி­பர் திரௌ­பதி முர்­மு­வை­யும் அவர் சந்­தித்­துப் பேசி­னார். அதி­பர் மாளி­கை­யில் அவ­ருக்­குப் பாரம்­ப­ரிய முறை­யி­லான முப்­படை அணி­வகுப்பு மரி­யாதை வழங்­கப்­பட்­டது.