புதுடெல்லி: மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால்ராய், தலைநகர் புதுடெல்லியில் அடுத்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி வரை பட்டாசுகளை விற்கவோ வெடிக்கவோ சேமித்து வைக்கவோ கூடாது என்று தடை விதித்துள்ளார். இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகை அடுத்த மாதம் 24ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கையில் இந்த உத்தரவு வெளியாகி இருக்கிறது.
இந்த ஆண்டு இணையத்தில் பட்டாசுகளை விற்பதற்கும் நேரடியாக விற்பதற்கும் அரசாங்கம் தடை விதிப்பதாக அமைச்சர் கோபால்ராய் டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார்.
இந்தத் தடையைக் கடுமையாக அமலாக்கும் வகையில், காவல்துறை, டெல்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழு, வருவாய்த் துறை ஆகியவற்றுடன் இணைந்து செயல்திட்டம் வகுக்கப்படும் என்றார் அமைச்சர். தலைநகரில் பொதுமக்களை மாசு அபாயத்திலிருந்து காப்பது இதன் நோக்கம்.
இந்த உத்தரவின்கீழ், வகையான பட்டாசுகளின் உற்பத்தி, சேமிப்பு, விற்பனை, பயன்பாடு ஆகியவை டெல்லியில் முற்றிலும் தடைசெய்யப்படும்.
மிக மோசமான காற்றுத் தூய்மைக்கேட்டுப் பிரச்சினையை எதிர்கொள்ளும் உலக நகரங்களில் ஒன்று புதுடெல்லி. பட்டாசு வெடிப்பதால் அது மேலும் மோசமாகும் சாத்தியம் அதிகம்.

