'இது இந்தியாவில் முதலீடு செய்வதற்கான பொற்காலம்'

'இது இந்தியாவில் முதலீடு செய்வதற்கான பொற்காலம்'

1 mins read
4781f6c1-4878-4dc8-80f0-559d2f410c0c
-

புது­டெல்லி: இந்­தி­யா­வில் முத­லீடு செய்­வ­தற்­கான பொற்­கா­லம் இது என மத்­திய வர்த்­தக தொழில் துறை அமைச்­சர் பியூஷ் கோயல் தெரி­வித்­துள்­ளார்.

கலி­ஃபோர்­னி­யா­வில் நடை­பெற்ற நிகழ்ச்சி ஒன்­றில் கலந்­து­கொண்டு பேசிய அவர், அனைத்து ஜன­நா­ய­கங்­க­ளுக்­கும் தாயாக இந்­தியா உள்­ளது என்­றார்.

இதை நினைத்து இந்­தி­யர்­கள் பெரு­மை­கொள்ள வேண்­டும் என்று குறிப்­பிட்ட அவர், வளர்ச்சி அடைந்த நாடாக உரு­வெ­டுக்கத் தேவை­யான அனைத்து நட­வடிக்கை­க­ளை­யும் இந்­திய அரசு மேற்­கொண்டு வரு­வ­தாக கூறினார்.

"ஒரு வளர்ச்சி அடைந்த நாட்டிற்­கான இந்­தி­யா­வின் பய­ணத்­தின் ஒரு பகு­தி­யாக நீங்களும் இருக்க வேண்­டும் என்ற எண்­ணத்­து­டன் அனை­வ­ரை­யும் அழைக்­கி­றேன். இந்­தி­யா­வில் தயா­ரான பொருள்­கள், இந்­திய கைவி­னை­ஞர்­க­ளால் உரு­வாக்­கப்­பட்ட கைத்­தறி ஆடை­கள், கலைப்­பொ­ருள்­கள், காதி பொருள்­கள் உள்­ளிட்­ட­வற்­றைப் பரி­சா­கக் கொடுக்க வேண்­டும் என்ற உறு­தி­மொ­ழியை எடுக்க அனை­வ­ரை­யும் நான் வலி­யு­றுத்தி கேட்­டுக்கொள்­கி­றேன்," என்­று அமைச்­சர் பியூஷ் கோயல் மேலும் கூறினார்.