பானாஜி: தனக்குச் சொந்தமான நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக கோவா காவல்துறையிடம் இங்கிலாந்தின் புதிய உள்துறை அமைச்சர் சூவெல்லா பிரேவர்மனின் தந்தை கிறிஸ்டி பெர்னாண்டஸ் புகார் அளித்துள்ளார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கிறிஸ்டி பெர்னாண்டஸ், கோவாவை பூர்வீகமாகக் கொண்டவர். அவரது தாயார் உமா தமிழ்ப் பெண் ஆவார்.
கிறிஸ்டி பெர்னாண்டசின் மூதாதையருக்குச் சொந்தமான நிலங்கள் வடக்கு கோவாவில் வெவ்வேறு பகுதிகளில் உள்ளன.
இந்நிலையில் இரண்டு நிலங்களையும் சிலர் ஆக்கிரமித்துள்ளதாகவும் 13,900 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த இரு நிலங்களையும் மீட்டுத் தரக்கோரியும் அவர் காவல்துறையில் புகார் மனு அளித்துள்ளார்.
மேலும், கோவா முதல்வர், காவல்துறை தலைவர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் அவர் தனது புகார் மனுவின் பிரதியை அனுப்பி உள்ளார். இதையடுத்து, வழக்குப் பதிவு செய்துள்ள கோவா காவல்துறை, சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து விசாரணை மேற்கொண்டுள்ளது.

