பாகிஸ்தானுக்கு உதவும் அமெரிக்கா: இந்தியா கண்டனம்

2 mins read
2e0dfa9a-e9ee-4279-8609-4f6322e28d37
'எஃப்-16' ரக போர் விமானங் கள் மிக நவீன மானவை என் கிறார்கள் பாதுகாப்புத் துறை நிபுணர்கள்.கோப்புப்படம்: ஊடகம் -

புது­டெல்லி: பாகிஸ்­தான் ராணு­வத்­தில் உள்ள போர் விமா­னங்­களை மேம்­ப­டுத்த அமெ­ரிக்கா நிதி­யு­தவி வழங்க உள்­ள­தாக வெளி­யான தக­வலை அடுத்து, அமெ­ரிக்­கா­வி­டம் இந்­தியா தனது எதிர்ப்பை பதிவு செய்­துள்­ளது.

'எஃப்-16' ரக போர் விமா­னங்கள் மிக நவீனமானவையாகும். அமெரிக்க ராணுவத்துக்குப் பலம் சேர்க்கும் போர் விமானங்களில் இதுவும் ஒன்று.

இந்நிலையில், பாகிஸ்தானுக்கு ஏற்­கெ­னவே வழங்­கி­யுள்ள அதி நவீன 'எஃப்-16' போர் விமா­னங்­களை மேம்ப­டுத்த ரூ.3,500 கோடி வழங்­கு­கிறது அமெ­ரிக்கா. இதனால் இந்­தியா மட்­டு­மல்­லா­மல் ஆசிய நாடு­கள் பல­வும் அதிர்ச்சி அடைந்­துள்­ள­தாக ஊட­கச் செய்தி தெரி­விக்­கிறது.

அமெ­ரிக்­கா­வின் இந்த நட­வ­டிக்­கை­யா­னது, பாகிஸ்­தான் இந்­தி­யா­வைக் குறி­வைக்க ஏது­வாக அமை­யும் என்று இந்­தியா கவலை தெரி­வித்­துள்ள நிலை­யில், போர் விமான பரா­ம­ரிப்­புக்­கான சேவை மட்­டுமே வழங்­கப்­ப­டு­வ­தா­க­வும் புதிய ராணு­வத் தொழில்­நுட்­பங்­கள், ஏவு­க­ணை­கள் ஆகியவை பாகிஸ்­தா­னுக்கு வழங்­கப்­ப­ட­வில்லை என்றும் அமெ­ரிக்­கத் தரப்பு தெரி­வித்­துள்­ளது. மேலும், பயங்­க­ர­வா­தத்­துக்கு எதி­ரான அமெ­ரிக்க நட­வ­டிக்­கை­களில் பாகிஸ்­தா­னும் உத­வு­வ­தாகவும் கூறி­யுள்­ளது.

எனி­னும் அமெ­ரிக்கா தற்­போது அளிக்­கும் தொகை­யைக் கொண்டு பாகிஸ்­தா­னால் மூன்று ரஃபேல் விமா­னங்­களை வாங்க முடி­யும் என்­றும் கடந்த நான்கு ஆண்­டு­களில் பாகிஸ்­தா­னுக்கு அமெ­ரிக்கா செய்த உத­வி­யைக் காட்­டி­லும் தற்­போது வழங்­கப்­படும் தொகை மிக அதி­கம் என்­றும் இந்­தியா சுட்­டிக்­காட்டி உள்­ளது.

மேலும், தெற்கு-மத்­திய ஆசிய விவ­கா­ரங்­க­ளுக்­கான அமெ­ரிக்க உதவி செய­லா­ளர் டொனால்ட் லூவி­டம் இந்­திய அரசு தனது கண்­ட­னத்தைப் பதிவு செய்­துள்ளது.

அமெ­ரிக்­கா­வின் இந்­தப் புதிய முடி­வின் பின்­ன­ணி­யில் உள்ள நோக்­கத்தை ஏற்க இய­லாது என்று இந்­தியா தெரி­வித்­துள்­ளது.

உக்­ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்த பின்­னர் அமெ­ரிக்­கா­வும் ஐரோப்­பிய நாடு­களும் ரஷ்யா மீது பல்­வேறு தடை­களை விதித்து வரு­கின்­றன. இதன் மூலம் ரஷ்­யா­வுக்­குப் பொரு­ளி­யல் நெருக்­க­டியை ஏற்­ப­டுத்த முனை­கின்­றன.

ஆனால் இந்த நட­வ­டிக்­கை­களுக்கு இந்­தியா நேர­டி­யாக ஆத­ரவு வழங்­க­வில்லை. இதை­ய­டுத்தே இந்­தி­யா­வுக்கு வேறு வகை­யில் நெருக்­கடி ஏற்­ப­டுத்­தும் வித­மாக பாகிஸ்­தா­னுக்கு ராணுவ ரீதி­யி­லான உத­வி­களை அமெரிக்கா செய்­வ­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

போர் விமானங்களை மேம்படுத்த ரூ.3,500 கோடி வழங்குகிறது எனத் தகவல்