குஜராத் தேர்தலைச் சீர்குலைக்க பயங்கரவாதிகள் சதித்திட்டம்

குஜராத் தேர்தலைச் சீர்குலைக்க பயங்கரவாதிகள் சதித்திட்டம்

2 mins read
89d797f2-8332-4102-b8f2-b2283d1bf980
-

வலதுசாரி, மதத் தலைவர்களை தாக்கக்கூடும் என உளவுத்துறை எச்சரிக்கை

அக­ம­தாபாத்: குஜ­ராத் சட்­டப்­பேரவைத் தேர்­தலைச் சீர்­கு­லைக்க பயங்­க­ர­வாத குழுக்­கள் சதித்­திட்டம் தீட்டி உள்­ள­தாக மத்­திய, மாநில அர­சு­களை உள­வுத்­துறை எச்­ச­ரித்­துள்­ளது.

இந்த சதித்­திட்­டத்­தின் பின்­னணி­யில் 'இஸ்­லா­மிக் ஸ்டேட் கொரா­சன் பிர­தே­சம்' (ஐஎஸ்­கேபி) என்ற பயங்­க­ர­வாத அமைப்பு இருப்­ப­தா­க­வும் மத்­திய உள­வுத்­துறை கூறி­யுள்­ளது.

மேலும், நாட்­டில் உள்ள வல­து­சாரி தலை­வர்­களைத் தாக்­கு­வ­தற்கு பயங்­க­ர­வாத குழுக்­கள் திட்­ட­மிட்டுள்­ள­தா­க­வும் பில்­கிஸ் பாலி­யல் வன்­கொ­டுமை வழக்­கில் தண்­டனை பெற்­ற­வர்­களை முன்­கூட்டியே சிறை­யில் இருந்து விடு­வித்­ததை எதிர்த்து பயங்­க­ர­வா­தி­கள் இந்­தச் சதித்­திட்­டத்தை தீட்­டி­யுள்­ள­தா­க­வும் உள­வுத்­துறை வட்­டா­ரங்­கள் தெரி­விக்­கின்­றன.

இந்த ஆண்டு இறு­தி­யில் குஜ­ராத் சட்­டப்­பே­ர­வைத் தேர்­தல் நடை­பெற உள்­ளது. எனவே அம்­மா­நிலத்­தில் நில­வும் அமை­தி­யை­யும் நல்­லி­ணக்­கத்­தை­யும் சீர்­கு­லைப்­பதே பயங்­க­ர­வாத அமைப்­பு­க­ளின் திட்டம் என்­பது தெரி­ய­வந்­துள்­ளது.

இதை­ய­டுத்து, வல­து­சாரி அமைப்­பு­கள், மதத் தலை­வர்­கள், பாது­காப்­புப் படை­யி­னர் மீது எந்த நேரத்­தி­லும் தாக்­கு­தல் நடை­பெற வாய்ப்­புள்­ள­தாக உள­வுத்­துறை தரப்பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அண்டை நாடான ஆப்­கா­னிஸ்­தா­னில் ஐஎஸ் பயங்­க­ர­வாத அமைப்­பின் செயல்­பா­டு­கள் அதி­க­ரித்­துள்­ளன. அங்கு தாலி­பான் ஆட்சி நடை­பெற்று வரும் சூழ­லில், ஐஎஸ் அமைப்­புக்கு ஆத­ரவு அளிக்­கும் ஐஎஸ்­கேபி, ஹிஸ்­புல் முஜா­கி­தீன், லஷ்கர் இ தொய்பா உள்­ளிட்ட பயங்­க­ர­வாத குழுக்­கள் இந்­திய எல்­லைக்­குள் ஊடு­ரு­வுவது அதி­கரித்து வரு­வ­தா­க­வும் அத்­த­கைய ஊடு­ரு­வல் முயற்­சி­கள் முறி­ய­டிக்­கப்­ப­டு­வ­தா­க­வும் இந்­திய ராணு­வம் கூறி­யுள்­ளது.

இந்­நி­லை­யில், இந்­திய இளை­யர்­களை அணி திரட்டி, உள்­நாட்­டி­லேயே போரா­ளிக் குழுக்­களை உரு­வாக்க ஐஎஸ்­கேபி பயங்­க­ர­வாத அமைப்பு முயன்று வரு­வ­தா­கக் கூறப்­ப­டு­கிறது. இப்­பு­திய போராளிக் குழுக்­களை வைத்து குஜ­ராத்­தில் சட்­டப்­பே­ர­வைத் தேர்­த­லுக்கு முன்­பும் தேர்­தல் நடை­பெ­றும் போதும் பெரும் தாக்­கு­தலை நடத்­து­வதே பயங்­க­ர­வாத அமைப்­பு­க­ளின் திட்­டம் என உள­வுத்­துறை வட்­டா­ரங்­கள் தெரி­விக்­கின்­றன.

எனவே, குஜ­ராத் மட்­டு­மல்லாமல், அதன் அண்டை மாநி­லங்­க­ளி­லும் உரிய முன்­னெச்­ச­ரிக்கை நட­வடிக்கை­கள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன.

இந்­திய தலை­வர்­களை தாக்கு­வதற்கு சதித்­திட்­டம் தீட்­டிய ஐஎஸ்ஐஎஸ் அமைப்­பைச் சேர்ந்த ஒரு­வர் அண்­மை­யில் ரஷ்­யா­வின் பாது­காப்பு சேவைப் பிரி­வால் கைது செய்­யப்­பட்­டார். அவ­ரி­டம் பயங்­க­ர­வா­தி­க­ளின் சதித்­திட்­டம் குறித்து தீவிர விசா­ரணை நடை­பெறுகிறது.