குண்டர் கும்பல்: 50 இடங்களில் அதிரடிச் சோதனை

குண்டர் கும்பல்: 50 இடங்களில் அதிரடிச் சோதனை

1 mins read
67e7d40a-8658-4780-9d90-6fddb262a66d
-

சண்­டி­கர்: வட மாநி­லங்­களில் குண்­டர் கும்­பல்­கள், கூலிப்­ப­டை­க­ளின் ஆதிக்­கம் அதி­க­ரித்து வரும் நிலை­யில், ஐம்­ப­துக்­கும் மேற்­பட்ட இடங்­களில் தேசியப் புல­னாய்வு அமைப்பு அதி­கா­ரி­கள் நேற்று அதி­ரடிச் சோதனை நட­வ­டிக்கை மேற்­கொண்­ட­னர்.

அண்­மைக்­கா­ல­மாக குண்­டர் கும்­பல்­கள் பல்­வேறு குற்­றச் செயல்­களில் ஈடு­பட்டு வரு­கின்­றன. ஹரியானா, பஞ்­சாப், ராஜஸ்­தான், டெல்லி உள்­ளிட்ட மாநி­லங்­களில் கூலிப்­ப­டை­யி­ன­ரின் செயல்­பாடு கார­ண­மாக கொலை, கொள்­ளைச் சம்­ப­வங்­கள் அதி­க­ரித்­துள்­ளன.

இந்­நி­லை­யில், பஞ்­சாப்பைச் சேர்ந்த பிர­பல பாட­கர் சித்து மூஸ்­வாலா படு­கொலை செய்­யப்­பட்­டார். இதற்கு உள்­ளூர் குண்­டர் கும்பல்­களுக்கு இடையே நில­விய போட்­டி­தான் கார­ணம் என்று கூறப்­ப­டு கிறது.

காவல்­துறை மேற்­கொண்ட விசா­ர­ணை­யின்­போது குண்­டர் கும்­பல்­களும் கூலிப்­ப­டை­யி­ன­ரும் தீவி­ர­வாத அமைப்­பு­க­ளு­டன் தொடர்பு வைத்­தி­ருப்­பது அம்­ப­ல­மா­னது. மேலும், பாட­கர் சித்து மூசே­வாலா கொலை­யில் தொடர்­பு­டைய குற்­ற­வா­ளி­கள், இந்தி நடி­கர் சல்மான்கானை­யும் தீர்த்­துக் கட்ட சதித்­திட்­டம் தீட்­டி­யி­ருந்த பர­ப­ரப்பு தக­வ­லும் வெளி­யாகி உள்­ளது.

இதை­ய­டுத்து வட மாநி­லங்­களில் தேசிய புல­னாய்வு முகமை அதி­கா­ரி­கள் ஐம்­ப­துக்­கும் மேற்பட்ட இடங்­களில் சோதனை நடத்தி­னர். சித்து மூஸ்­வாலா படுகொலைச் சம்­ப­வம் தொடர்­பாக இது­வரை 23 பேர் கைதாகி உள்­ள­னர். இவர்­களுக்கு தீவி­ர­வாத இயக்­கங்­க­ளு­டன் தொடர்­புள்­ளதா என விசா­ரணை நடை­பெற்று வரு­கிறது.