மூன்று கி.மீ. ஓடி அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்

மூன்று கி.மீ. ஓடி அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்

1 mins read
fb15e5fc-510c-4720-a6fb-b3c07609839d
-

பெங்­க­ளூரு: அறுவை சிகிச்­சைக்­காக நோயாளி காத்­தி­ருந்த நிலை­யில், போக்­கு­வ­ரத்து நெரி­ச­லில் சிக்­கிய மருத்­து­வர், மூன்று கிலோ மீட்­டர் தூரம் ஓடி மருத்­து­வ­ம­னை­யைச் சென்­ற­டைந்­தார்.

பின்­னர் அறுவை சிகிச்­சையை வெற்­றி­க­ர­மாக முடித்த அவ­ருக்­குப் பாராட்­டு­கள் குவி­கின்­றன.

பெங்­க­ளூ­ரைச் சேர்ந்த இரைப்­பைக் குடல் அறுவை சிகிச்சை நிபு­ண­ரான கோவிந்த் நந்­த­கு­மார் (படம்), நேற்று முன்­தி­னம் மருத்­து­வ­ம­னைக்­குச் செல்­லும் வழி­யில் போக்­கு­வ­ரத்து நெரி­ச­லில் சிக்­கி­னார்.

நோயாளி ஒரு­வ­ருக்கு அவர் அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருந்­தது. ஆனால், போக்­கு­வ­ரத்து நெரி­சல் கார­ண­மாக, மருத்­து­வ­மனை­யைச் சென்­ற­டைய 45 நிமிடங்­கள் ஆகும் என்­ப­தைக் கணித்த கோவிந்த், தனது காரை சாலையிலேயே நிறுத்­தி­விட்டு, மருத்­து­வ­ம­னையை நோக்கி ஓடத் தொடங்­கி­னார்.

சில நிமி­டங்­களில் அங்கு சென்ற­டைந்த அவர், அறுவை சிகிச்சையை வெற்­றி­க­ர­மாக முடித்­த­தா­க­வும் தொடர்ந்து உடற்­ப­யிற்சி செய்­வ­தால் மூன்று கிலோ மீட்டர் தூரத்தை ஓடிக் கடந்­தது தமக்கு சோர்வை ஏற்­ப­டுத்­த­வில்லை என்றும் மருத்­து­வர் கோவிந்த் நந்தகுமார் தெரி­வித்­தார்.