இலங்கையில் கடப்பிதழுக்கு விண்ணப்பிப்போர் அதிகரிப்பு

இலங்கையில் கடப்பிதழுக்கு விண்ணப்பிப்போர் அதிகரிப்பு

1 mins read
c2e35cf5-161a-487b-801f-8a3947e17108
-

கொழும்பு: இலங்­கை­யில் நடப்பு ஆண்­டில் கடந்த எட்டு மாதங்­களில் மட்­டும் சுமார் 700,000 கடப்­பி­தழ்­கள் வழங்­கப்­பட்­டுள்­ளன.

இது­வரை இவ்­வ­ளவு பெரிய எண்­ணிக்­கை­யி­லான கடப்­பி­தழ்­களை வழங்­கி­ய­தில்லை என அந்­நாட்­டின் குடி­நு­ழை­வுத்­துறை தெரி­வித்­துள்­ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு இலங்கை­யில் 658,725 கடப்­பி­தழ்­கள் வழங்­கப்­பட்­ட­தாக அத்­து­றை­யின் அதி­கா­ரி­கள் சுட்­டிக்­காட்டி உள்­ள­னர்.

கடந்த ஆண்­டில் ஆகஸ்ட் மாதம் இறுதி வரை­யில் 171,168 கடப்­பிதழ்­கள் மட்­டுமே வழங்­கப்­பட்­டன. அது தற்­போது 312 விழுக்­காடு அதி­க­ரித்து 705,412 ஆக உள்­ளது. இலங்கை­யில் ஒரே ஆண்­டில் இந்தளவுக்கு கடப்­பி­தழ் வழங்­கப்­பட்­ட­தில்லை என்­கிறது அந்­நாட்­டின் குடி­நு­ழை­வுத்­துறை.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்­தில் மட்­டும் 28,976 கடப்­பி­தழ்­கள் வழங்­கப்­பட்­ட­தா­க­வும் அந்த எண்­ணிக்கை தற்­போது 297 விழுக்­காடு அதி­க­ரித்­துள்­ளது என்­றும் அத்­துறை தெரி­வித்­தது.

நடப்­பாண்­டில் மாதந்­தோ­றும் சரா­ச­ரி­யாக 88,170 கடப்­பி­தழ்­கள் வழங்­கப்­பட்­டுள்ள நிலை­யில், நாள்­தோ­றும் சுமார் நான்­கா­யி­ரம் பேர் கடப்­பித­ழுக்கு விண்­ணப்­பித்­த­தாக குடி­நு­ழை­வுத்­துறை வட்­டா­ரங்­கள் தெரி­விக்­கின்­றன.