இனப்பிரச்சினைக்குத் தீர்வு: இலங்கையை சாடிய இந்தியா

இனப்பிரச்சினைக்குத் தீர்வு: இலங்கையை சாடிய இந்தியா

2 mins read
eee33fd5-8d84-459b-88f1-37bc861082b4
-

ஜெனிவா: ஈழத் தமி­ழர்­கள் இனப்­பி­ரச்­சினை தொடர்பாக இலங்கை அரசு ஆக்­க­பூர்­வ­மான முயற்­சி­கள் எதை­யும் மேற்­கொள்­ள­வில்லை என இந்­தியா சாடி­யுள்­ளது.

இனப்­பி­ரச்­சினை தொடர்­பாக இலங்கை அரசு உரிய அர­சி­யல் தீர்வு­களை முன்­னெ­டுக்க வேண்டும் என்­பது இந்­தி­யா­வின் எதிர்­பார்ப்பு என ­ஜெ­னி­வா­வில் நடை­பெற்ற ஐநா மனித உரி­மை­கள் ஆணையக் கூட்டத்­தில் இந்­தியா தனது கருத்­தைப் பதிவு செய்­தது.

ஜெனி­வா­வில் ஐக்­கிய நாடு­கள் சபை மனித உரிமை ஆணை­யத்தின் 51வது அமர்­வில் ஐநாவுக்­கான இந்தி­யா­வின் நிரந்­த­ரப் பிர­தி­நிதி இந்­தி­ரா­மணி பாண்டே பங்­கேற்­றார்.

அப்­போது பேசிய அவர், இலங்கை அர­சி­யல் சாச­னத்­தின் 13வது திருத்­த­மா­னது அதி­கா­ரப் பகிர்­வுக்­கு­ரி­யது என்­றும் அதன்­படி மாகாண சபை­க­ளுக்கு அதி­கா­ரப் பகிர்வு, மாகா­ண­ ச­பைக்­குத் தேர்­தல் என்­பவை முக்­கி­ய­மா­னவை எனவும் சுட்­டிக்­காட்­டி­னார்.

இவை அர­சி­யல் தீர்­வுக்­கான நட­வ­டிக்­கை­கள் என்­றும் இலங்கை அரசு இதனை மேற்­கொள்­ள­வில்லை என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.

"மாகா­ணங்­க­ளுக்கு சுயாட்சி, தமி­ழர்­க­ளுக்கு அதிக அதி­கா­ரப் பகிர்வு ஆகி­ய­வற்­றை இந்­தியா தொடர்ந்து இலங்­கை­யி­டம் வலி­யுறுத்தி வரு­கிறது. ஆகை­யால் இந்த விவ­கா­ரத்­தில் இலங்கை அரசு உட­ன­டி­யான, நம்­ப­கத்­தன்மை­யான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்­டும்.

"ஈழத் தமி­ழர்­க­ளுக்கு நீதி, அமைதி, சமத்­து­வம், கண்­ணி­யத்தை உறுதிசெய்ய ஒன்­று­பட்ட இலங்­கை­யின் கட்­ட­மைப்­பிற்­குள் ஓர் அர­சி­யல் தீர்வை உரு­வாக்­கித்­தர வேண்­டும்," என்­றார் இந்­தி­ரா­மணி பாண்டே.

இலங்­கை­யின் மாகாண சபை­களுக்கு முன்­கூட்­டியே தேர்­தல் நடத்­தப்­பட வேண்­டும் என்று வலி­யு­றுத்­திய அவர், இத்­த­கைய தேர்­தல்­கள் மூலம் இலங்கை மக்­கள் தங்­க­ளது எதிர்­கா­லத்தை தேர்வு செய்ய முடி­யும் என்­றார்.

ஆகை­யால்­தான் இலங்கை அரசு உரிய நட­வ­டிக்கை எடுக்க வலி­யு­றுத்­து­கி­றோம் என்­றும் இலங்­கை­யில் உள்ள தமி­ழர்­க­ளுக்கு நீதி, சம உரி­மை­கள் வழங்­கப்­பட்டு அவர்­கள் அமை­தி­யு­ட­னும் கௌர­வத்­து­ட­னும் வாழ வேண்­டும் என்­பதே இந்­தி­யா­வின் விருப்­பம் என்­றும் ஐநாவுக்­கான இந்தி­யா­வின் நிரந்­த­ரப் பிர­தி­நிதி இந்­தி­ரா­மணி பாண்டே தமது உரையில் குறிப்பிட்டார்.