ஜெய்ப்பூர்: மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் மீது காலணி வீசப்பட்டதால் ராஜஸ்தானில் பரபரப்பு ஏற்பட்டது.
மாநில சுகாதாரத்துறை அமைச்சர் அசோக் சந்த்னா நேற்று முன்தினம் ஜெய்ப்பூரில் உள்ள புஷ்கர் மேளா திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
அமைச்சர் உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்ட பின்னர், அவர் ஒலிபெருக்கியின் அருகே வந்தபோது, திடீரென அங்கு கூடியிருந்தவர்களில் சிலர், காலணிகளை எடுத்து மேடையை நோக்கி வீசத் தொடங்கினர். சிலர் வேறு பொருள்களைத் தூக்கி வீசியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் அமைச்சர் அசோக் சந்த்னாவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
கூட்டத்தில் இருந்த சிலர் அமைச்சருக்கு எதிராக கண்டன முழக்கங்களும் எழுப்பினர்.
இந்த சம்பவத்துக்கு எதிர்க்கட்சிகள்தான் காரணம் என பாஜகவினர் குற்றம்சாட்டி உள்ளனர்.

