253 அரசியல் கட்சிகளை முடக்கிய தேர்தல் ஆணையம்

253 அரசியல் கட்சிகளை முடக்கிய தேர்தல் ஆணையம்

2 mins read
d70a018f-2087-4f77-b679-9c2f7fd47783
-

ஆறு ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடாத 14 தமிழக கட்சிகளும் முடங்கின

புது­டெல்லி: தமி­ழ­கத்­தைச் சேர்ந்த 14 கட்­சி­கள் உட்­பட 253 பதிவு செய்­யப்­பட்ட, அங்­கீ­க­ரிக்­கப்­ப­டாத அர­சி­யல் கட்­சி­களை முடக்கி தேர்­தல் ஆணை­யம் உத்­த­ர­விட்டுள்­ளது.

மேலும், ஆறு ஆண்­டு­கள் எந்­தத் தேர்­த­லி­லும் போட்­டி­யிடாத அர­சி­யல் கட்­சி­கள் தேர்­தல் ஆணை­யத்­தின் பட்­டி­ய­லில் இருந்து நீக்­கப்­படும் என­வும் அந்த ஆணை­யம் அறி­வித்­துள்­ளது.

நாடு தழு­விய அள­வில் இது­வரை 2,796 கட்­சி­கள் தேர்­தல் ஆணை­யத்­தில் பெய­ரைப் பதிவு செய்­துள்­ளன. எனி­னும் இவற்­றுள் பெரும்­பா­லான கட்­சி­கள் இன்­னும் அந்த ஆணை­யத்­தால் அங்­கீ­க­ரிக்­கப்­ப­ட­வில்லை.

இந்­நி­லை­யில், அங்­கீ­கா­ரம் பெறாத 86 அர­சி­யல் கட்­சி­களை தன் பட்­டி­ய­லி­ல் இ­ருந்து தேர்­தல் ஆணை­யம் நீக்­கி­யுள்­ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு நடை­பெற்ற நாடா­ளு­மன்­றப் பொதுத் தேர்­த­லில் நாடு முழு­வ­தும் 623 கட்­சி­கள் மட்­டுமே போட்­டி­யிட்­டன.

இந்­நி­லை­யில் தேர்­தல் ஆணை­யத்­தில் பதிவு செய்­யப்­பட்டி­ருந்­தா­லும் பல்­வேறு கட்­சி­கள் செய­லற்ற நிலை­யில்­தான் உள்ளன என்­பதும் கறுப்புப் பணப் பரி­மாற்றத்­துக்கு உதவி செய்­வ­தும் சிபிஐ, தேசியப் புல­னாய்வு முகமை விசா­ரணை­யின் மூலம் தெரி­ய­வந்­தது.

அர­சி­யல் கட்­சி­க­ளுக்கு கிடைக்­கும் நன்­கொ­டைக்கு வரு­மான வரி செலுத்த வேண்­டி­ய­தில்லை. இந்த சலு­கை­யைப் பயன்­ப­டுத்தி பல கட்­சி­கள் ஆயி­ரம் கோடி ரூபாய் அள­வுக்கு வரி ஏய்ப்பு செய்­துள்­ள­தாக வரு­மான வரித்­துறை தெரி­வித்­துள்­ளது.

இது தொடர்­பாக எழுந்­துள்ள புகார்­களை அடுத்து, உரிய விசா­ரணை மேற்­கொண்ட தேர்­தல் ஆணை­யம் பல்­வேறு மாநி­லங்கள், யூனி­யன் பிர­தே­சங்­களில் கட்­சிகளைப் பதி­வு ­செய்­தும், அங்கீ­கா­ரம் பெறாத 86 கட்­சி­களைத் தனது பட்­டி­ய­லில் இருந்து நீக்­குவ­தாக அறி­வித்­துள்­ளது.

தேர்­தல் ஆணை­யத்­தில் அளித்­துள்ள விவ­ரங்­க­ளின்­படி அக்­கட்­சி­க­ளின் அலு­வ­லக முக­வரிக்கு அதி­கா­ரி­கள் நேரில் சென்று விசா­ரித்­த­போது, அங்கு அக்­கட்­சி­கள் செயல்­ப­ட­வில்லை என்­பது தெரி­ய­வந்­தது. அதன் பிறகே நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது.

மேலும், தேர்­தல் ஆணை­யத்தில் பதி­வு­செய்து சுமார் ஆறு ஆண்டு­கள் தேர்­த­லில் போட்­டி­யிடாத கட்­சி­க­ளின் பதிவு நீக்­கப்­படும் என்­றும் தேர்­தல் ஆணை­யம் அறி­வித்­துள்­ளது.

முதற்­கட்­ட­மாக நாடு முழு­வ­தும் 253 அர­சி­யல் கட்­சி­கள் முடக்­கப்­பட்­டுள்­ளன. அவற்­றுள் 14 கட்­சி­கள் தமி­ழ­கத்­தில் உள்­ளன. பீகார், டெல்லி, கர்­நா­டகா, மகாராஷ்­டிரா, தமிழ்­நாடு, தெலுங்­கானா, உத்­த­ரப் பிரதேசம் ஆகிய மாநி­லங்­களில்­தான் செயல்படாத அரசி­யல் கட்­சி­க­ளின் எண்ணிக்கை அதி­கம் உள்­ள­தாகக் கூறப்படுகிறது.

தற்­போது முடக்­கப்­பட்­டுள்ள அர­சி­யல் கட்­சி­கள் இது­வரை பயன்­ப­டுத்­திய சின்­னங்­களும் முடக்­கப்­பட்­டுள்­ளன. ஆக மொத்தம் அண்­மைய நட­வ­டிக்­கை­கள் மூலம் 339 அங்­கீ­க­ரிக்­கப்­ப­டாத கட்­சி­கள் மீது தேர்­தல் ஆணை­யம் நட­வடிக்கை எடுத்­துள்­ளது.

கடந்த மே மாதம் முதல் கணக்­கி­டும்­போது தேர்­தல் ஆணை­யம் 537 கட்­சி­கள் மீது நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது.