பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து 11 பேர் பலி

பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து 11 பேர் பலி

1 mins read
221d3a79-767d-40f8-8f9c-c46b63700c41
பள்ளத்தாக்கில் விழுந்து கவிழ்ந்த பேருந்தில் இருந்த பயணிகளை பொதுமக்கள் மீட்டனர்.பின்னர் அவர்களுடன் காவல்துறை யினரும் இணைந்தனர்.சிலருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.படம்: ஊடகம் -

ஸ்ரீந­கர்: சிறிய ரகப் பேருந்து பள்­ளத்­தாக்­கில் கவிழ்ந்து விபத்­துக்­குள்­ளா­ன­தில் 11 பேர் மாண்­ட­னர். இத்­து­ய­ரச் சம்­ப­வம் காஷ்­மீ­ரின் பூஞ்ச் மாவட்­டத்­தில் நிகழ்ந்­துள்­ளது.

நேற்று முன்­தி­னம் 36 பய­ணி­களு­டன் அந்­தப் பேருந்து பூஞ்ச் மாவட்­டத்தை நோக்­கிச் சென்று கொண்­டி­ருந்­த­போது, எல்­லைப் பகுதி அருகே உள்ள பிராரி நல்லா என்ற இடத்­தில் விபத்துக்குள்ளானது.

இதை­ய­டுத்து அங்கு பாது­காப்புப் பணி­யில் உள்ள ராணு­வம், காவல்­து­றை­யி­னர் அப்­ப­கு­தி­யில் வசிக்­கும் கிராம மக்­க­ளின் உத­வி­யோடு மீட்­புப் பணி­யில் ஈடு­பட்­ட­னர்.

சம்­பவ இடத்­தி­லேயே ஒன்பது பேர் பலி­யா­கி­விட்ட நிலை­யில் மேலும் இரு­வர் மருத்­து­வ­ம­னை­யில் உயி­ரி­ழந்­தனர். இந்த விபத்­தில் 27 பேர் காய­ம­டைந்­துள்­ள­னர். அவர்­களுக்கு மருத்­து­வ­ம­னை­யில் தீவிர சிகிச்சை அளிக்­கப்­பட்டு வரு­கிறது.

இந்­நி­லை­யில், ஜம்மு காஷ்­மீர் துணை ­நிலை ஆளு­நர் மனோஜ் சின்ஹா ​​விபத்­தில் உயி­ரி­ழந்­த­வர்­களுக்கு இரங்­கல் தெரி­வித்­த­தோடு, அவர்­க­ளின் குடும்­பத்­தா­ருக்கு தலா ரூ.5 லட்­சம் இழப்­பீடு வழங்­கு­வ­தாக­வும் தமது டுவிட்­டர் பக்­கத்­தில் பதி­விட்­டுள்­ளார்.

மேலும் காய­ம­டைந்­த­வர்­கள் விரை­வில் குண­ம­டைய பிரார்த்திப்­ப­தா­க­வும் அனை­வ­ருக்­கும் சிறந்த சிகிச்சை அளிக்­கப்­ப­டு­வதை காவல்­து­றை­யி­ன­ரும் குடிமை அதி­கா­ரி­களும் உறுதி செய்ய அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது என்­றும் ஆளு­நர் தெரி­வித்­துள்­ளார்.