இந்தி மொழி தினத்தைக் கொண்டாடுவதற்கு கன்னட அமைப்புகள் கடும் எதிர்ப்பு

2 mins read
bcba300b-68c5-4728-8b64-88d46c4b3cff
-

பெங்களூரு: இந்தி மொழி தினக் கொண்­டாட்­டங்­க­ளுக்கு கர்­நா­ட­கா­வில் கடும் எதிர்ப்பு கிளம்­பி­யது. கர்­நா­ட­கா­வில் கன்­னட மொழிக்கு­த் தான் முன்­னு­ரிமை அளிக்­கப்­பட வேண்­டும் என அங்­குள்ள சில அமைப்­பு­கள் வலி­யு­றுத்தி உள்­ளன.

செப்­டம்­பர் 14ஆம் தேதி இந்தி மொழி நாளா­கக் கொண்­டா­டப்­படும் என மத்­திய அரசு அறி­வித்­துள்­ளது. இதை­ய­டுத்து கர்­நா­ட­கா­வில் ஆளும் பாஜக அரசு நேற்று இந்தி மொழி நாள் அரசு சார்­பில் சிறப்­பாகக் கொண்­டா­டப்­படும் என அறி­வித்­தி­ருந்­தது.

ஆனால் உள்­ளூர் அமைப்­பு­கள் இதற்­குக் கடும் எதிர்ப்பு தெரி­வித்­தன. மேலும், முன்­னாள் பிர­த­மர் தேவ­க­வு­டா­வின் மத­சார்­பற்ற ஜனதா தளம் கட்­சி­யும் அர­சின் அறி­விப்­புக்கு கண்­ட­னம் தெரி­வித்­தது.

இது தொடர்பாக அக்கட்சியின் மூத்த தலைவர் குமாரசாமி, கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு கடிதம் எழுதி இருந்தார்.

அதில், "கர்நாடகாவில் கன்னட மொழியைக் கொண்டாடுவதை தவிர்த்துவிட்டு, இந்தி மொழி தினம் கொண்டாடுவதை ஏற்க முடியாது. கர்நாடக மக்களின் வரிப்பணத்தில் இந்தி தினம் கொண்டாடுவதை அனுமதிக்க முடியாது," என்று முன்னாள் முதல்வருமான குமாரசாமி திட்டவட்டமாகக் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கிடையே, இந்தி மொழி இந்தியாவுக்கு உலக அளவில் பெருமை சேர்ப்பதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், எளிமை, தன்னிச்சையான தன்மை, உணர்வுத்திறன் ஆகியவற்றின் மூலம் இந்தி எப்போதுமே மக்களைக் கவரும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் ஆக அதிகமாகப் பேசப்படும் ஒரு மொழியை வளப்படுத்தவும் வலுப்படுத்தவும் அயராது முயற்சிகளை மேற்கொண்ட அனைவருக்கும் இதயபூர்வமான நன்றியைத் தெரிவிப்பதாக அவர் தமது பதிவில் மேலும் கூறியுள்ளார்.