காவல்துறையினர் மீது தாக்கு; கோல்கத்தாவில் பதற்றம்

காவல்துறையினர் மீது தாக்கு; கோல்கத்தாவில் பதற்றம்

2 mins read
fe5be22d-5385-40a9-a80c-720746d65c31
கோல்கத்தா வில் காவல் துறைக்கும் பாஜகவின ருக்கும் இடையேயான மோதலின்போது காவல்துறை வாகனங்கள் தீக்கிரையாக்கப் பட்டன. இது தொடர்பான காணொளிப் பதிவுகள் வெளியாகி உள்ளன.படம்: ஊடகம் -

கோல்­கத்தா: மேற்கு வங்க மாநிலத்­தில் பாஜ­க­வி­னர் நடத்­திய பேர­ணி­யின்­போது காவல்­துறை அதி­கா­ரி­கள் பலர் தாக்­கப்­பட்­ட­தாக ஆளும் திரி­ணா­மூல் காங்­கி­ரஸ் கட்சி குற்­றம்­சாட்டி உள்­ளது.

இந்­நி­லை­யில், காவல்­துறை அதி­காரி ஒரு­வரை பாஜ­க­வி­னர் கடு­மை­யாகத் தாக்­கும் காணொ­ளிப் பதி­வு­கள், புகைப்­ப­டங்­கள் சமூக ஊட­கங்­களில் வெளி­யாகி பர­வ­லாகப் பகி­ரப்­பட்டு வரு­கின்­றன.

நேற்று முன்­தி­னம் முதல்­வர் மம்தா பானர்ஜி தலை­மை­யி­லான ஆட்­சிக்கு எதி­ராக மாநி­லத் தலை­நக­ரான கோல்­கத்­தா­வில் பிரம்­மாண்டப் பேரணி நடை­பெ­றும் என பாஜக அறி­வித்­தி­ருந்­தது.

இதை­ய­டுத்து பேர­ணி­யில் பங்­கேற்க ஆயி­ரக்­க­ணக்­கான பாஜ­க­வி­னர் கோல்­கத்­தா­வில் திரண்­ட­னர். அதே­ச­ம­யம் பிற ஊர்­களில் இருந்து பேர­ணி­யில் பங்­கேற்க வந்­த­வர்­களை காவல்­து­றை­யி­னர் ஆங்­காங்கே தடுத்து நிறுத்­தி­ய­தா­கப் புகார்­கள் எழுந்­தன.

இத­னால் ராணி­கஞ்ச், போல்பூர், துர்­காப்­பூர் உட்­பட பல்­வேறு பகுதிகளில் பாஜ­க­வி­ன­ருக்­கும் காவல்­து­றை­யி­ன­ருக்­கும் இடையே மோதல் வெடித்­தது. அப்­போது காவல்­து­றை­யி­னர் பாஜ­க­வி­ன­ரால் தாக்­கப்­பட்­ட­தாக ஊட­கச் செய்­தி­கள் தெரி­விக்­கின்­றன.

இதை­ய­டுத்து பாஜ­க­வி­னர் பலர் கைது செய்­யப்­பட்­ட­னர். கோல்­கத்தா எல்­லைப் பகு­தி­களில் காவல்­துறை­யி­னர் குவிக்­கப்­பட்­டி­ருந்­த­னர். இத்­த­கைய நட­வ­டிக்­கை­க­ளின் மூலம் மேற்கு வங்க முதல்­வர் மம்தா பானர்ஜி சர்­வா­தி­கா­ரப் போக்கைக் கையாள்­வது உறு­தி­யா­வ­தாக அம்மா­நில எதிர்க்­கட்­சித் தலைவர் சுவேந்து அதி­காரி சாடி­னார்.

இரு­த­ரப்­பி­ன­ரும் மோதிக்­கொண்ட­தால் கோல்­கத்தா நக­ரின் ஒரு பகுதி போர்க்­க­ளம் போன்று காட்­சி­ய­ளித்­தது என்­றும் மோத­லின்­போது ஒரு புறம் கற்­களை வீசி தாக்­கு­தல் நடத்­தப்­பட்­ட­தா­க­வும் மறு­பு­றம் கண்­ணீர் புகை குண்­டு­கள் வீசப்­பட்டு, ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­கள் மீது தண்­ணீர் பீய்ச்­சி­ய­டிக்­கப்­பட்­ட­தா­க­வும் ஊட­கங்­கள் தெரி­வித்­தன.

கோல்­கத்­தா­வில் பதற்ற நிலை நீடிப்­ப­தா­க­வும் காவல்­து­றை­யின் கண்­கா­ணிப்பு தீவி­ர­ம­டைந்­துள்­ள­தாக­வும் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.