எல்லை மோதலுக்குப் பிறகு முதன்முதலாக ஒரே நிகழ்வில் சீன அதிபரும் இந்தியப் பிரதமரும்

எல்லை மோதலுக்குப் பிறகு முதன்முதலாக ஒரே நிகழ்வில் சீன அதிபரும் இந்தியப் பிரதமரும்

2 mins read
b8beed15-436f-4794-b703-ace14ed613e8
-

புது­டெல்லி: உஸ்­பெ­கிஸ்­தா­னின் சமர்­காண்ட் நக­ரில் நடை­பெ­றும் ஷங்­காய் ஒத்­து­ழைப்பு அமைப்பு மாநாட்­டில் கலந்­து­கொள்ள பிர­த­மர் நரேந்­திர மோடி சென்­றுள்­ளார்.

சமா்கண்ட் நக­ரில் நேற்று 15ஆம் தேதி தொடங்­கிய இந்த மாநாடு, இன்று வரை நடை­பெ­றும்.

அந்த மாநாட்­டில் சீன அதி­பர் ஸி ஜின்­பிங், ரஷ்ய அதி­பர் விளா­டி­மிர் புட்­டின் ஆகி­யோ­ரும் பங்­கேற்­கின்­ற­னர். இந்­திய, சீன எல்­லை­யில் இரண்டு ஆண்­டு­க­ளுக்கு மேலாக நடந்த மோத­லுக்­குப் பிறகு, சில தினங்­க­ளுக்கு முன்பு சீன, இந்­திய வீரர்­கள் சர்ச்­சைக்­கு­ரிய எல்­லை­யில் இருந்து பின்­வாங்­கிய நிகழ்வு நடந்­துள்­ளது. அது­வரை இரு நாடு­களின் உற­வில் விரி­சல் ஏற்­பட்­டது. எல்லை மோத­லுக்­குப் பின் இரு நாட்­டுத் தலை­வர்­களும் இப்­போ­து­தான் நேருக்­கு­நேர் பார்த்­துக்­கொள்­ளும் நிலை உரு­வா­கி­யுள்­ளது.

இந்­நி­லை­யில் இந்த மாநாட்­டின்­போது சீன, இந்­திய தலை­வர்­கள் சந்­தித்­துப் பேசு­வார்­களா என்­பது குறித்து இரு நாட்டு தரப்­பி­லும் உறு­தி­செய்­யப்­ப­ட­வில்லை. ரஷ்யா அதி­பர் புட்­டி­னும் மோடி­யும் சந்­திப்பது குறித்து ரஷ்யா ஏற்­கெனவே உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளது. இந்­தச் சந்­திப்­பின்­போது இரு நாட்­டுத் தலை­வர்­களும் வர்த்­த­கம், ரஷ்­யா­வின் உர­விற்­பனை மற்­றும் இரு நாடு­க­ளுக்கு இடை­யே­யான உணவு விநி­யோ­கம் ஆகி­யவை குறித்து பேசு­வர் என்று இந்திய வெளி­யு­ற­வுத்­துறை செய­லா­ளர் வினே மோகன் குவாத்ரா செய்­தி­யா­ளர் மாநாட்­டில் தெரி­வித்­தார். இந்தக் கூட்டத்தில் வர்த்­த­கம், வட்­டா­ரப் பாது­காப்பு மற்­றும் சுற்­று­லாத்­துறை, தீவி­ர­வாதம் போன்­றவை குறித்து தலை­வர்­கள் விவா­திப்­பர் என்­றார்.

பெய்­ஜிங்கை தலை­மை­யி­ட­மா­கக் கொண்ட 'ஷாங்­காய் ஒத்­து­ழைப்பு அமைப்பு' என்­பது சீனா, இந்­தியா, ரஷ்யா, கஜ­கஸ்­தான், கிா்கிஸ்­தான், தஜி­கிஸ்­தான், உஸ்­பெ­கிஸ்­தான், பாகிஸ்­தான் ஆகிய எட்டு உறுப்பு நாடுகளைக் கொண்ட­தா­கும்.