அசாம் மாநில தீவிரவாதக் குழுக்களுடன் அமைதி ஒப்பந்தம்

அசாம் மாநில தீவிரவாதக் குழுக்களுடன் அமைதி ஒப்பந்தம்

2 mins read
1a3331de-e942-46ab-97b5-fabc59b30140
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா ஆகியோருடன் தீவிரவாத அமைப்புகளின் பிரதிநிதிகள் கைகுலுக்கினர். படம்: ஊடகம் -

முதல்­வர் ஹிமந்த பிஸ்வா: அமைதி மற்­றும் நல்­லி­ணக்­கத்­தில் புதிய சகாப்­தம்

புது­டெல்லி: அசாம் மாநி­லத்­தின் சில பகு­தி­களில் நிலை­யான அமை­தியை ஏற்­ப­டுத்த, 8 தீவி­ர­வாதக் குழுக்­க­ளு­டன் அசாம் மாநில அரசும் மத்­திய அரசும் நேற்று அமைதி ஒப்­பந்­தத்­தில் கையெ­ழுத்­திட்­டன.

அசாம் மாநி­லத்­தில் தீவி­ர­வாதக் குழுக்­கள் பல இயங்கி வந்­தன. இவற்­றில் சில கடந்த 2012ஆம் ஆண்டு முதல் சண்டை நிறுத்­தத்தை அறி­வித்­தன. இந்­தக் குழு­வைச் சேர்ந்­த­வர்­கள் முகாம்­களில் தங்­கி­யி­ருந்­த­னர். இந்­நி­லை­யில் அசாம் மாநி­லத்­தின் 8 தீவி­ர­வாத அமைப்­பு­க­ளு­டன் டெல்­லி­யில் நேற்று முன்­தி­னம் முத்­த­ரப்பு அமைதி ஒப்­பந்­தம் கையெ­ழுத்­தா­னது. இதில் மத்­திய அரசு, அசாம் மாநில அரசு மற்­றும் 8 தீவி­ர­வாதக் குழுக்­கள் கையெ­ழுத்­திட்­டன.

ஆதி­வாசி தேசிய விடு­த­லைப் படை, ஆதி­வாசி கோப்ரா அசாம் அமைப்பு, பிர்சா மின்னல் படை, சந்­தல் புலிப் படை, ஆதி­வாசி மக்­கள் ராணு­வம் ஆகி­யவை உட்­பட 8 தீவி­ர­வாத அமைப்­பு­க­ளின் பிர­தி­நி­தி­கள் டெல்­லி­யில் மத்­திய உள்­துறை அமைச்­சர் அமித்ஷா, அசாம் முதல்­வர் ஹிமந்த பிஸ்வா சர்மா ஆகி­யோர் முன்­னி­லை­யில் இந்த அமைதி ஒப்­பந்­தத்­தில் கையெ­ழுத்­திட்­டனர். இது­கு­றித்து அசாம் முதல்­வர் ஹிமந்த பிஸ்வா சர்மா கூறு­கை­யில், ''அசாம் மாநி­லத்­தில் அமைதி மற்­றும் நல்­லி­ணக்­கத்­தில் புதிய சகாப்­தம் ஏற்­பட இந்த ஒப்­பந்­தம் வழி­வ­குக்­கும்,'' என்­றார்.

தடை செய்­யப்­பட்ட உல்ஃபா, காமத்­பூர் விடு­தலை அமைப்பு ஆகி­யவை தவிர இதர தீவி­ர­வாத அமைப்­பு­கள் மத்­திய, மாநில அர­சு­களுடனான அமைதி ஒப்­பந்­தத்­தில் கையெ­ழுத்­திட்­டன. ஆகஸ்ட் மாதம் குகி பழங்­குடி யூனி­யன் தீவி­ர­வாதி­கள் ஆயு­தங்­களை ஒப்­ப­டைத்து சர­ண­டைந்­த­னர். ஜன­வ­ரி மாதம் திவா விடு­த­லைப் படை, ஐக்­கிய கூர்க்கா மக்­கள் அமைப்பு ஆகி­ய­வற்­றைச் சேர்ந்­த­வர்­கள் ஆயு­தங்­களை ஒப்­ப­டைத்­து­விட்டு சரண் அடைந்­த­னர்.