இடைவாரில் மறைத்து தங்கத் துகள் கடத்தல்

இடைவாரில் மறைத்து தங்கத் துகள் கடத்தல்

1 mins read
f244b185-966f-4315-81fd-92a7518c11e3
-

மும்பை: மும்பை விமான நிலை­யத்­தில் தரை­யி­றங்­கிய பயணி ஒரு­வர், தனது இடை­வா­ரில் ரூ.1 கோடி மதிப்­புள்ள தங்­கத்­ து­கள்­களை மறைத்து வைத்­தி­ருந்­ததை சுங்­கத்­துறை அதி­கா­ரி­கள் கண்­டு­பி­டித்­த­னர். அவர் உத்­த­ர பி­ர­தே­சத்­தைச் சேர்ந்­த­வர் என்று காவல்­துறை தெரி­வித்­தது.

வெளி­நாட்­டில் இருந்து மும்­பைக்கு விமா­னத்­தில் தங்­கம் கடத்தி வரப்­ப­டு­வ­தாக சுங்­க­வ­ரித்­துறை அதி­கா­ரி­க­ளுக்கு ரக­சிய தக­வல் கிடைத்­தது.

இதன்­பே­ரில் ரியாத்­தில் இருந்து தோகா வழி­யாக மும்பை வந்த விமா­னத்­தில் வந்து இறங்­கிய பய­ணி­க­ளி­டம் சோதனை மேற்­கொண்­ட­னர். அப்­போது இடை­வா­ரில் மறைத்து வைக்­கப்­பட்டு இருந்த 2.5 கிலோ எடை­யுள்ள தங்கத் துகள்­கள் இருந்­ததை கண்­டு­பி­டித்து பறி­மு­தல் செய்­த­னர். ரியாத்­தில் முந்­தன் என்ற ஆட­வர், தன்­னி­டம் இந்­தப் பொட்­ட­லத்­தைக் கொடுத்து மும்­பைக்கு கொண்டு செல்­லு­மாறு தெரி­வித்து அதற்­காக ரூ.20,000 பணம் தந்­த­தாக அவர் தெரி­வித்­தார். காவல்­துறை இது குறித்து விசா­ரித்து வரு­கிறது.