காந்திநகர்: குஜராத்தில் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத்தில் சுமாா் ரூ.800 கோடி முறைகேடு நடைபெற்றதாக கூறப்படும் வழக்கில், அந்த மாநில முன்னாள் உள்துறை அமைச்சா் விபுல் செளதரியை ஊழல் தடுப்புத் துறை கைது செய்துள்ளது.
மேசானா மாவட்டத்தில் உள்ள பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கப் பணியாளா்களுக்கு ஊக்கத்தொகை வழங்க ஒதுக்கப்பட்ட நிதியில் ரூ.14.8 கோடி கையாடல் செய்ததாக கடந்த 2020ஆம் ஆண்டு குஜராத் குற்றப் புலனாய்வுத் துறை விபுல் செளதரியை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

