கெஜ்ரிவால்: மதுபான ஊழல் என்றால் என்னவென்று புரியவில்லை

கெஜ்ரிவால்: மதுபான ஊழல் என்றால் என்னவென்று புரியவில்லை

1 mins read
28d3575a-6ab3-443a-8ec9-83256492b78c
-

மத்­திய விசா­ரணை அமைப்­பு­க­ளின் அதி­ர­டிச் சோதனை குறித்து டெல்லி முத­ல­மைச்­சர் அர­விந்த் கெஜ்­ரி­வால் கண்­ட­னம் தெரி­வித்­துள்­ளார்.

"மத்­தி­யப் புல­னாய்­வுத் துறை­யும், அம­லாக்க இயக்­கு­ன­ர­க­மும் தேவை­யின்றி அனை­வ­ரை­யும் தொந்­த­ரவு செய்­து வருகின்றன.

"துணை நிலை ஆளு­நர், பாஜக மற்றும் சிபிஐ ஆகி­யவை மது­பான ஊழ­லில் பல்­வேறு அளவு பணத்தை மேற்­கோள் காட்­டி­யுள்­ளன.

ஆனால் அது உண்­மை­யில் என்­ன­வென்று எனக்குப் புரி­ய­வில்லை. பாஜக தலை­வர் ஒரு­வர் 8,000 கோடி ரூபாய் ஊழல் என்­கி­றார், துணை நிலை ஆளு­நர் 144 கோடி ரூபாய் ஊழல் என்று சொல்­கி­றார், சிபிஐ பதிவு செய்­துள்ள எஃப்ஐ­ஆ­ரில் ஒரு கோடி ரூபாய் ஊழல் என்று சொல்­கிறது. மது­பான ஊழல் என்­றால் என்­ன­வென்றே புரி­ய­வில்லை.

"இந்த நாடு, சிபிஐ மற்­றும் அம­லாக்­கத் துறை­யால் அச்­சத்­தில் உள்­ளது," என்று அவர் கூறி­யுள்­ளார்.