ஹைதராபாத்தில் ஒரே நிகழ்வு, வெவ்வேறு கோணங்கள்

ஹைதராபாத்தில் ஒரே நிகழ்வு, வெவ்வேறு கோணங்கள்

2 mins read
b39fd0ea-30a6-4ae2-aa82-e3df0fc9be37
-

ஹைத­ரா­பாத்: தெலுங்­கானா மாநி­லத் தலை­ந­கர் ஹைத­ரா­பாத்­தில் நேற்று ஒரே நிகழ்வு இரு கோணங்­களில் கொண்­டா­டப்­பட்­டது. ஹைத­ரா­பாத்தை ஆண்ட நிஜா­மின் ஆட்சி முடி­வுக்கு வந்து அவர் ஆட்­சிக்கு உட்­பட்ட நிலப்­ப­ரப்பு இந்­திய ஒன்­றி­ய­த்துடன் இணைந்த நாளை பாஜக நேற்று ஹைத­ராபாத் விடு­தலை தின­மா­கக் கொண்­டா­டி­யது.

கொண்­டாட்­டத்­தில் கலந்­து­கொண்டு பேசிய இந்­திய உள்­துறை அமைச்­சர், நிஜா­மின் ஆட்­சி­யி­லி­ருந்து ஹைத­ரா­பாத் விடு­தலை பெற்று இந்­தி­யா­வு­டன் இணைந்­த­தற்கு சர்­தார் வல்­ல­பாய் பட்­டேல்­தான் கார­ணம் என்று புக­ழா­ரம் சூட்­டி­னார். அவர் அவ்­வாறு செய்­தி­ருக்­கா­வி­டில் அகண்ட பாரத இலக்கு நிறை­வே­றி­யி­ருக்­காது என்­றார் அவர்.

ஆனால் இந்­தத் தினத்தை ஹைத­ரா­பாத் விடு­தலை தின­மாகக் கொண்­டா­டி­னால் வாக்­கு­கள் கிடைக்­காது என்று பயந்து கடந்த 75 ஆண்­டு­க­ளாக ஹைத­ரா­பாத்­தில் ஆட்சி அமைத்த அர­சி­யல் தலை­வர்­கள் அதை அவ்­வாறு கொண்­டா­ட­வில்லை என்று திரு அமித் ஷா சாடி­னார்.

ஹைத­ராபாத் விடு­தலை தினத்­தைக் கொண்­டாட முடிவு எடுத்­த­தற்­காக இந்­தி­யப் பிர­த­மர் நரேந்­திர மோடிக்கு திரு ஷா நன்றி தெரி­வித்­தார்.

1948ஆம் ஆண்டு செப்­டம்­பர் மாதம் 17ஆம் தேதி­யன்று நிஜா­மின் கட்­டுக்­குள் இருந்த ஹைத­ரா­பாத் மாநி­லத்­துக்கு இந்­தி­யப் படை­கள் அனுப்­பப்­பட்­ட­னர். இந்த அதி­ரடி நட­வ­டிக்­கைக்கு ஆப்­ரே­ஷன் போலோ என்று பெய­ரி­டப்­பட்­டது. இதை அடுத்து, ஹைத­ரா­பாத் மாநி­லம் இந்­தி­யா­வின் ஒரு பகு­தி­யா­னது.

இதற்­கி­டையே, தெலுங்­கானா முதல்­வர் கே. சந்­தி­ர­சே­கர் ராவ் தலை­மை­யில் அம்­மா­நி­லத்­தில் மூன்று நாள் கொண்­டாட்­டங்­கள் நடத்­தப்­ப­டு­கின்­றன. தெலுங்­கானா அரசு இந்­தத் தினத்தை தெலுங்­கானா தேசிய ஒருங்­கி­ணைப்பு நாளா­கக் கொண்­டா­டு­கிறது.

கொண்­டாட்­டத்தை முன்­னிட்டு தெலுங்­கானா மாநி­லத்­தில் உள்ள 119 தொகு­தி­க­ளி­லும் பேர­ணி­கள் நடத்­தப்­பட்­டன.

கொண்டாட்டத்தின்போது உணர்ச்சி பொங்க பேசிய அமித் ஷா. படம்: ஏஎஃப்பி