அம்ரிந்தர் சிங் பாஜகவில் இணைகிறார்

அம்ரிந்தர் சிங் பாஜகவில் இணைகிறார்

2 mins read
b7414be1-6e71-40be-bf5c-b865af4b8c21
-

சண்­டி­கர்: பஞ்­சாப் முதல்­வ­ராக இருந்த முன்­னாள் காங்­கி­ரஸ் தலை­வர் அம்­ரிந்­தர் சிங், நாளை பாஜ­க­வில் இணைய இருப்­ப­தாக இந்­திய ஊட­கங்­கள் தெரி­விக்­கின்­றன.

காங்­கி­ரஸ் கட்­சி­யின் மூத்த தலை­வர்­களில் ஒரு­வ­ராக இருந்த அம்­ரிந்­தர் சிங், பஞ்­சாப் முதல்­வ­ராக இரு­முறை பதவி வகித்­துள்­ளார்.

2014ஆம் ஆண்டு நடை­பெற்ற நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் இவர், பாஜ­க­வின் அருண் ஜெட்­லியை எதிர்த்­துப் போட்­டி­யிட்டு வெற்றி பெற்­றார்.

2015ஆம் ஆண்­டில் பஞ்­சாப் மாநில காங்­கி­ரஸ் தலை­வ­ராக அம்­ரிந்­தர் சிங் பொறுப்­பேற்­றார்.

இவ­ரது தலை­மை­யில் 2017ஆம் ஆண்டு சட்­ட­மன்­றத் தேர்­தலை காங்­கி­ரஸ் எதிர்­கொண்டு வெற்றி பெற்­றது. அதை­ய­டுத்து, இவர் முதல்­வ­ராகப் பதவி ஏற்­றார்.

காங்­கி­ரஸ் கட்­சி­யில் இணைந்த நவ்­ஜோத் சிங் சித்­து­வுக்­கும் அம்­ரிந்­தர் சிங்­கிற்­கும் இடையே ஏற்­பட்ட போட்டி கார­ண­மாக, பத­விக் காலம் முடி­வ­டை­வ­தற்கு முன்­பா­கவே, இவர் முதல்­வர் பத­வி­யில் இருந்து வில­கும்­படி நேர்ந்­தது.

இத­னால் அதி­ருப்தி அடைந்த அம்­ரிந்­தர் சிங், கடந்த ஆண்டு அக்­டோ­பர் 28ஆம் தேதி காங்­கி­ரஸ் கட்­சி­யி­லி­ருந்து வில­கி­னார்.

நவம்­பர் 2ஆம் தேதி பஞ்­சாப் மக்­கள் காங்­கி­ரஸ் எனும் புதிய அர­சி­யல் கட்­சி­யைத் தொடங்கி, பாஜ­க­வு­டன் கூட்­டணி அமைத்து 2022 பஞ்­சாப் சட்­ட­மன்­றத் தேர்­தலை எதிர்­கொண்­டார்.

பஞ்­சாப் மாநி­லத்­தில் மொத்­த­முள்ள 117 தொகு­தி­களில் 28 தொகு­தி­களில் இவ­ரது கட்சி போட்­டி­யிட்­டது. எனி­னும், ஒரு தொகு­தி­யி­லும் இவர் வெற்றி பெற­வில்லை.

இந்­நி­லை­யில், லண்­டன் சென்று முதுகு தண்­டு­வ­டத்­தில் அறுவை சிகிச்சை செய்­து­கொண்ட அம்­ரிந்­தர் சிங், அண்­மை­யில் நாடு திரும்­பி­னார்.

இதை­ய­டுத்து, இந்­தி­யப் பிர­த­மர் நரேந்­திர மோடி­யை­யும் உள்­துறை அமைச்­சர் அமித் ஷாவை­யும் அம்­ரிந்­தர் சிங் சந்­தித்­தார்.

அப்­போது, பாஜ­க­வில் தான் இணை­வது குறித்­தும் தனது கட்­சியை பாஜ­க­வில் இணைப்­பது குறித்­தும் அவர் பேசி­ய­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

இந்­நி­லை­யில், பாஜக தலை­வர் ஜெ.பி. நட்டா முன்­னி­லை­யில் நாளை அம்­ரிந்­தர் சிங் பாஜ­க­வில் இணைய உள்­ள­தாக பஞ்­சாப் மக்­கள் காங்­கி­ரஸ் செய்­தித் தொடர்­பா­ளர் பிரித்­பால் சிங் பாலி­யா­வால் தெரி­வித்­துள்­ளார்.

அம்­ரிந்­தர் சிங்­கு­டன் பஞ்­சாப் மக்­கள் காங்­கி­ரஸ் கட்­சி­யைச் சேர்ந்த முன்­னாள் எம்பி ஒரு­வர், ஏழு முன்­னாள் சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் ஆகி­யோ­ரும் நாளை பாஜ­க­வில் இணைய உள்­ள­தா­க­வும் கட்­சியை இணைக்­கும் விழா அடுத்த வாரம் சண்­டி­க­ரில் நடை­பெ­றும் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.

அப்­போது பஞ்­சாப் மக்­கள் கட்­சி­யின் மற்ற பொறுப்­பா­ளர்­கள் பாஜ­க­வில் இணை­வார்­கள் என்­றும் பிரித்­பால் சிங் பாலி­யா­வால் தெரி­வித்­துள்­ளார்.