கேரள மாநில ஆளுநர், முதல்வர் இடையே பனிப்போர் முற்றுகிறது

கேரள மாநில ஆளுநர், முதல்வர் இடையே பனிப்போர் முற்றுகிறது

2 mins read
f7b82d76-3aca-4a49-82a5-7a3c1d64eac5
-

புது­டெல்லி: பல்­க­லைக்­க­ழக நியம­னங்­கள் தொடர்­பாக கேரள ஆளு­நர் ஆரிப் முகம்­மது கானுக்­கும் அம்­மா­நில முதல்­வர் பின­ராயி விஜ­ய­னுக்­கும் இடை­யே­யான பனிப்­போர் மேலும் தீவி­ர­ம­டைந்­துள்­ளது.

உரிய தகுதி உள்ளபோதி­லும் தமக்­குத் தெரிந்­த­வர்­கள் என்ற ஒரே கார­ணத்­துக்­காக சிலர் எந்த வேலைக்­கும் விண்­ணப்­பிக்­கக் கூடாது என்று சொல்­வது எந்த வகை­யில் நியா­யம் என முதல்­வர் பின­ராயி விஜ­யன் கேள்வி எழுப்பி உள்­ளார்.

ஆனால் பல்கலைக்கழக விவகாரத்தில் கேரள அர­சுக்கு எதி­ரான புகார்­களை நிரூ­பிக்க போது­மான ஆதாரங்­கள் உள்­ள­தாக ஆளு­நர் ஆரிப் முக­மது கான் கூறி­யுள்­ளார்.

கேர­ளா­வில் ஆளும் மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் கட்­சித் தலை­வர்­க­ளின் உற­வி­னர்­கள் சிலர் சட்­டத்தை மீறி அங்­குள்ள பல்­க­லைக்­க­ழ­கங்­களில் பல்வேறு பத­வி­களில் நிய­மிக்­கப்­ப­டு­வ­தா­கப் புகார்­கள் எழுந்­துள்­ளன. இத்­தகைய நிய­ம­னங்­க­ளுக்கு ஆளு­நர் ஆரிப் முகம்மது கான் எதிர்ப்பு தெரி­வித்­துள்­ளார்.

அண்­மை­யில் முதல்­வர் பினராயி விஜ­ய­னின் உத­வி­யா­ளர் ராகே­ஷின் மனைவி பிரியா வர்­கீஸ், கண்­ணூர் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் இணைப் பேரா­சி­ரி­ய­ரா­கப் பணி நிய­ம­னம் செய்­யப்­பட்­டார். இத­னால் கடும் அதி­ருப்தி அடைந்த ஆளு­நர் ஆரிப் முகம்­மது கான், மாநில அர­சின் செயல்­பா­டு­களை பகி­ரங்­க­மாக விமர்­சித்­தார்.

இதை ஏற்­றுக்­கொள்­ளாத முதல்­வர் பின­ராயி விஜ­யன், தமது உத­வி­யா­ள­ரின் உற­வி­னர்­கள் என்­ப­தற்­காக அவர்­கள் எந்த வேலைக்­கும் விண்­ணப்­பிக்கக் கூடாது என்று கூற முடி­யுமா எனக் கேள்வி எழுப்­பி­னார்.

"ஒரு வேலைக்­காக விண்­ணப்­பிக்­கும்­போது அவர்­கள் என்­னி­டம் அனு­மதி வாங்க வேண்­டிய அவ­சி­ய­மும் கிடை­யாது. தகுதி இருந்­தால் அவர்­க­ளுக்கு வேலை கிடைக்­கும். அவர்­கள் வேலை­யில் சேரக்­கூ­டாது என்று கூற ஆளு­ந­ருக்கு என்ன அதி­கா­ரம் உள்­ளது.

"இதற்­கா­கத்­தான் ஆளு­நர் தமது அதி­கா­ரத்தைப் பயன்­படுத்து­கி­றாரா? வேந்­தர் பத­வி­யும் இதற்­குத்­தான் பயன்­ப­டு­கி­றதா," என்­றும் முதல்­வர் பின­ராயி விஜயன் பல கேள்­வி­களை அடுக்கி உள்ளாா்.

இந்­நி­லை­யில், செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய ஆளு­நர் ஆரிப் முகம்­மது கான் கேரள அர­சுக்கு எதி­ரான புகார்­களை நிரூ­பிக்­கும் முக்­கிய ஆவ­ணங்­களை தாம் விரை­வில் வெளி­யி­டப்போவ­தா­கக் கூறி­னார்.

பல்கலைக்கழக நியமனங்கள் தொடர்பாக கேள்வி எழுப்பும் ஆளுநர்