பயங்கரவாதப் பயிற்சி: நாற்பது இடங்களில் அதிரடி சோதனை

பயங்கரவாதப் பயிற்சி: நாற்பது இடங்களில் அதிரடி சோதனை

1 mins read
d3196ea0-8702-4dfb-97b0-8ce0256b20bc
-

ஹைத­ரா­பாத்: பயங்­க­ர­வாத செயல்­களில் ஈடு­ப­டு­வ­தற்­குப் பயிற்சி அளிக்க முகாம்­களை நடத்­தி­ய­தாக 'பாப்­பு­லர் ஃபிரண்ட் ஆஃப் இந்­தியா' என்ற அமைப்­பின் மீது குற்­றம்­சாட்­டப்­பட்­டுள்­ளது. இதை­ய­டுத்து இந்த அமைப்­பு­டன் தொடர்­பு­டைய நாற்­பது இடங்­களில் தேசிய புல­னாய்வு அமைப்­பின் அதி­கா­ரி­கள் நேற்று அதி­ரடிச் சோதனை நட­வ­டிக்கை மேற்­கொண்­ட­னர்.

தெலுங்­கானா மாநி­லத்­தின் நிசா­மா­பாத் பகு­தி­யில் பயங்­க­ர­வாதச் செயல்­களை அரங்­கேற்­று­வ­தற்­காக 'பாப்­பு­லர் ஃபிரண்ட் ஆஃப் இந்­தியா' அமைப்பு ரக­சி­ய­மா­கப் பயிற்சி அளிப்­ப­தாக சில மாதங்­க­ளுக்கு முன்­னர் புகார்­கள் எழுந்­தன. இதை­ய­டுத்து கடந்த ஜூலை 4ஆம் தேதி நான்கு பேரை ஹைத­ரா­பாத் காவல்­துறை கைது செய்­தது.

இந்த வழக்கு பின்­னர் தேசிய புல­னாய்வு முக­மை­யி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டதை அடுத்து, அதன் அதி­கா­ரி­கள் ஆந்­தி­ரா­வி­லும் தெலுங்­கா­னா­வி­லும் தீவிர விசா­ரணை மேற்­கொண்டு வந்­த­னர். இந்­நி­லை­யில் இவ்­விரு மாநி­லங்­க­ளி­லும் நேற்று நாற்­பது இடங்­களில் அதி­ரடிச் சோதனை நடத்­தப்­பட்­டது.

பயங்­க­ர­வாதச் செயல்­களில் ஈடு­பட பயிற்சி அளித்­தல், மத ரீதி­யில் இரு தரப்­பி­னர் இடையே மோதலை உரு­வாக்க முயற்சி செய்­வது உள்­ளிட்ட குற்­றச்­சாட்­டு­க­ளின் அடிப்­ப­டை­யில் இந்தச் சோதனை நடை­பெற்­ற­தாக அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

நேற்று காலை தெலுங்­கா­னா­வில் 38 இடங்­க­ளி­லும் ஆந்­தி­ரா­வில் இரண்டு இடங்­க­ளி­லும் நடந்த சோத­னை­யின்­போது பல மின்­னி­லக்க கரு­வி­கள், முக்­கிய ஆவ­ணங்­கள், இரு கத்­தி­கள் ஆகி­யவை கைப்­பற்றப்­பட்­ட­தா­க­வும் இந்­தச் சோதனை தொடர்­பாக நான்கு பேர் கைதாகி உள்­ள­னர் என்­றும் அதி­கா­ரி­கள் கூறி­னர்.