ஸ்ரீதேவி மகளுக்கு வலைவீசிய அரசியல் தரகர்

ஸ்ரீதேவி மகளுக்கு வலைவீசிய அரசியல் தரகர்

2 mins read
e22b3cc1-7daf-4766-ad73-7e900529d6a5
ஜான்வி கபூர், அரசியல் தரகர் சுகேஷ். படங்கள்: ஊடகம் -

மும்பை: பண மோசடி வழக்கு தொடர்­பாக சிறை­யில் அடைக்­கப்­பட்­டுள்ள அர­சி­யல் தர­கர் சுகேஷ் சந்­தி­ர­சே­கர், நடிகை ஸ்ரீதே­வி­யின் மகள் ஜான்வி கபூ­ரை­யும் தன் வலை­யில் விழ­வைக்க முயற்சி செய்­தது தெரி­ய­வந்­துள்­ளது.

ஜான்­வி­யைப் போலவே மேலும் பல இளம் நடி­கை­களை தன்­வசப்­படுத்த அவர் பல கோடி­களை வாரி இறைத்­தி­ருப்­ப­தை­யும் அம­லாக்­கத்­துறை அதி­கா­ரி­கள் கண்டு­பி­டித்துள்­ள­னர்.

அர­சி­யல் தலை­வர்­கள், தொழி­லதி­பர்­கள் எனப் பல்­வேறு தரப்­பி­ன­ரி­டம் கோடிக்­க­ணக்­கில் பணம் பெற்று மோசடி செய்­துள்­ளார் சுகேஷ் சந்­தி­ர­சே­கர். அந்த வகை­யில் சிறை­வா­சம் அனு­ப­வித்து வரும் ஒரு தொழி­ல­தி­ப­ரின் மனை­வி­யி­டம் அவ­ரது கண­வரை வழக்­கில் இருந்து விடு­விக்க உத­வு­வ­தா­கக் கூறி ரூ.200 கோடி பெற்று ஏமாற்றி உள்­ளார்.

சுகேஷ் சந்­தி­ர­சே­கர் மீது 15 மோசடி வழக்­கு­கள் பதி­வாகி உள்­ளன. இந்­நி­லை­யில் திரைப்­பட நடிகை­கள் பல­ரு­ட­னும் அவ­ருக்­குத் தொடர்பு இருப்­பது தெரி­ய­வந்­தது. மோசடி செய்து திரட்­டிய பணத்­தில் பல கோடி­களை நடி­கை­க­ளுக்­காக அவர் வாரி இறைத்­துள்­ளார்.

நடி­கை­க­ளுக்கு விலை உயர்ந்த பரி­சுப் பொருள்­களை அளிப்­ப­து­தான் அவ­ரது வழக்­கம். இந்தி நடிகை ஜாக்­கு­லின் பெர்­னாண்­ட­சுக்கு இரண்டு கார்­களை அவர் பரி­ச­ளித்­துள்­ளார். தமக்­காக கோடிக்­க­ணக்­கில் செல­வி­டும் சுகேஷை திரு­ம­ணம் செய்து கொள்ள ஜாக்­கு­லின் விரும்­பி­ய­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.

அத­னால்­தான் சுகேஷ் மோசடி செய்­வது தெரிந்­தும் அவர் அதைப் பொருட்­ப­டுத்­த­வில்லை என்றும் அவரும் வழக்கில் சிக்கியுள்ளார் என்றும் காவல்­துறை தரப்­பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. ஜாக்­கு­லின் மேலா­ள­ருக்­கும்­கூட எட்டு லட்­சம் ரூபாய் மதிப்­புள்ள இரு­சக்­கர வாக­னத்­தைப் பரி­ச­ளித்­துள்­ளார் சுகேஷ்.

மேலும், மாடல் அழ­கி­கள் சில­ருக்­கும் அவர் வலை­வீசி உள்­ளார். நடி­கை­க­ளுக்குப் பரி­ச­ளிப்­ப­தற்கு மட்­டும் அவர் இரு­பது கோடி ரூபாய் செல­விட்­ட­தா­கத் தெரி­கிறது.

இந்­நி­லை­யில், ஸ்ரீதே­வி­யின் மூத்த மகள் ஜான்வி கபூ­ருக்­கும் சுகேஷ் தூது விட்­டார் என்­றும், ஜான்வி அதைக் கண்­டு­கொள்­ள­வில்லை என்­றும் ஊட­கச் செய்தி தெரி­விக்­கிறது.

இந்தித் திரை­யு­ல­கின் இளம் நடி­கை­க­ளான பூமி பெட்­னே­கர், சாரா அலி­கான் உள்­ளிட்­டோ­ருக்கு அழைப்பு விடுத்­துள்­ளார் சுகேஷ். அந்த வகை­யில் ஜான்வி கபூருக்­கும் விருந்து நிகழ்­வு­களில் பங்­கேற்க தூது அனுப்பி உள்­ளார்.

ஆனால் இந்த இளம் நடிகைகள் சுகேஷை நெருங்கவில்லை. சில இளம் நடிகைகள் பரிசுப் பொருள்களைப் பெற்றுக் கொண்டா லும் சுகேஷிடம் சிக்கவில்லை எனத் தெரிகிறது.