தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மின்தூக்கிக் கதவுகளுக்கு இடையே சிக்கி பெண் பலி

1 mins read
0a1cf320-e086-4868-b033-fa7b4750304d
-

மும்பை: மின்­தூக்கி­யின் கத­வு­க­ளுக்கு இடையே சிக்­கிக்­கொண்ட இளம் பள்ளி ஆசி­ரியை உயி­ரி­ழந்த சம்­ப­வம் மும்பை மக்­களை சோகத்­தி­லும் அதிர்ச்­சி­யி­லும் ஆழ்த்தி உள்­ளது.

இது குறித்து மும்பை காவல்­துறை தீவிர விசா­ரணை மேற்­கொண்­டுள்­ளது.

விபத்­தில் சிக்­கிய 26 வய­தான ஜெனல் ஃபெர்னாண்­டஸ் (படம்), ஆங்­கில உயர் நிலைப்­பள்­ளி­யில் ஆசி­ரி­யை­யா­கப் பணி­யாற்றி வந்­தார். கடந்த வெள்­ளிக்­கி­ழமை பள்­ளிக் கட்­ட­டத்­தின் ஆறா­வது மாடி­யில் இருந்து இரண்­டா­வது மாடி­யில் உள்ள பணி­யா­ளர் அறைக்­குச் செல்ல அவர் மின்­தூக்­கி­யைப் பயன்­ப­டுத்தி உள்­ளார்.

இந்­நி­லை­யில், மின்­தூக்கிக்குள் செல்ல முயன்­ற­போது அதன் கத­வு­கள் திடீ­ரென மூடிக்­கொண்­டன. இத­னால் இரு கத­வு­களுக்கு இடை­யில் அவர் சிக்­கிக்கொண்­டார்.

அப்போது மின்­தூக்கி கீழ் நோக்­கிச் செல்­லத் தொடங்­கி­யது. இத­னால் ஜெனல் வலி தாங்­கா­மல் அல­றத் தொடங்க, பள்ளி ஊழி­யர்­கள் அவரை மீட்க முயன்­ற­னர். எனி­னும் மின்­தூக்­கியை நிறுத்த முடி­ய­வில்லை.

நீண்ட நேர முயற்­சிக்­குப் பிறகே ஆசி­ரியை ஜெனலை மீட்க முடிந்­தது. எனி­னும் அவ­ரது உடல் முழு­வ­தும் பலத்த காயங்­கள் ஏற்­பட்­டி­ருந்­தன.

அத­னால் மருத்து­வ­ம­னைக்குக் கொண்டு செல்­லும் வழி­யி­லேயே அவர் இறந்­து­விட்­ட­தாக மருத்­து­வர்­கள் தெரி­வித்­த­னர்.