எல்லையில் புதிய முகாம்கள் அமைத்த சீனா: செயற்கைக்கோள் படங்கள் மூலம் அம்பலம்

எல்லையில் புதிய முகாம்கள் அமைத்த சீனா: செயற்கைக்கோள் படங்கள் மூலம் அம்பலம்

2 mins read
352c1bca-3df6-4c09-b2dc-75b21263934a
-

ஸ்ரீந­கர்: எல்­லை­யில் குவிக்­கப்­பட்­டு­ள்ள ராணு­வத் துருப்­பு­களை திரும்­பப் பெற்று வரு­வ­தாக சீனா கூறி­யது பொய்­யான தக­வல் எனத் தெரிய வந்­துள்­ளது.

அண்­மை­யில் எடுக்­கப்­பட்ட செயற்­கைக்­கோள் படங்­க­ளின் மூலம் எல்­லை­யில் உள்ள லடாக் பகு­தி­யில் சீனாவின் புதிய ராணுவ முகாம்­கள் தொடர்ந்து செயல்­பட்டு வரு­வது உறு­தி­யாகி உள்­ளது.

எல்லைப் பிரச்­சினை தொடர்­பாக இந்­தி­யா, சீனா இடையே 16 சுற்று பேச்­சு­வார்த்­தை­கள் நடை­பெற்­றுள்­ளன. அப்­போது பல்­வேறு முக்­கிய முடி­வு­கள் எடுக்­கப்­பட்­டன.

அதன்­படி எல்­லை­யில் உள்ள 'காக்ரா - ஹாட் ஸ்பி­ரிங்' பகு­தி­யில் இருந்து இரு­நாட்டு வீரர்களும் திரும்­பப் பெறப்­பட்­டனர். கடந்த 12ஆம் தேதி­யு­டன் படை­க­ளைத் திரும்­பப் பெறும் நட­வ­டிக்கை முடி­வுக்கு வந்­த­தாக இரு தரப்­பி­லும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. மேலும், அக்­கு­றிப்­பிட்ட எல்­லைப் பகு­தி­யில் இரு தரப்­புப் படை­களும் இல்லை என்­பதை இந்­தி­யா­வும் சீனா­வும் மீண்­டும் ஒரு­முறை உறுதி செய்து கொண்­ட­தா­க­வும் தக­வல் வெளி­யா­னது.

இந்­நி­லை­யில், அண்­மைய செயற்­கைக்­கோள் படங்­க­ளின் மூலம், காக்ரா எல்­லைப் பகு­தி­யில் சீன ராணு­வம் தனது புதிய முகாம்­களை அமைத்­தி­ருப்­பது தெரி­ய­வந்­துள்­ளது. படை­க­ளைத் திரும்­பப் பெற்­ற­தா­கக் கூறப்­பட்ட பகு­தி­யில் இருந்து சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரத்­திற்கு அப்­பால் இந்­தப் புதிய முகாம்­கள் உள்­ளன.

இதன் மூலம் சீன ராணு­வம் நம்­பிக்­கைத் துரோ­கம் செய்­துள்­ள­தாக இந்­தி­யத் தரப்பு கரு­து­கிறது.

இது­கு­றித்து லடாக் பகு­தியைச் சேர்ந்த கவுன்­சி­லர் கோன்­சோக் சிடான்­சின் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசு­கை­யில், இரு­த­ரப்­பும் ஒப்­புக்­கொண்­ட­தன் அடிப்­ப­டை­யில் இந்­திய ராணு­வம் முறை­யா­கச் செயல்­படு­கிறது என்­றும் காக்ரா பகு­தி­யில் இந்­திய ராணு­வம் மேற்­கொள்­ளும் வழக்­க­மான சுற்­றுக்­கா­வல் பணிக்கு சீன ராணு­வத்­தி­னர் தொடர்ந்து இடை­யூறு விளை­வித்து வரு­வ­தா­க­வும் குறிப்­பிட்­டார்.

"கடந்த ஐம்­பது ஆண்­டு­களாக அக்­கு­றிப்­பிட்ட பகு­தி­களில் உள்­ளூர் மக்­கள் கால்­ந­டை­களை மேய்த்து வந்­த­னர். அண்­மைய படைக்­கு­விப்பு கார­ண­மாக இனி அங்கு பொது­மக்­கள் செல்ல இய­லாது. இது­வரை நான்கு எல்­லைப் பகு­தி­களில் இருந்து சீனா தனது படை­களை திரும்­பப் பெற்­ற­தா­கக் கூறு­கிறது," என்­றார் கவுன்­சி­லர் கோன்­சோக் சிடான்­சின்.