விமானப்படையில் இணையும் புதிய ஹெலிகாப்டர்

விமானப்படையில் இணையும் புதிய ஹெலிகாப்டர்

1 mins read
17ffe0f9-4775-4a0d-be89-4b2ac7cb860b
-

புது­டெல்லி: உள்­நாட்டு தொழில்­நுட்­பத்தை மட்­டுமே பயன்­ப­டுத்தி தயா­ரிக்­கப்­பட்டு உள்ள ஹெலி­காப்­டர் இந்­திய விமா­னப் படை­யில் சேர்க்­கப்­பட உள்­ளது.

இந்­துஸ்­தான் ஏரோ­நாட்­டி­கல் நிறு­வ­னம் தயா­ரித்­துள்ள இந்த இல­கு­ரக ஹெலி­காப்­டர் சீனா, பாகிஸ்­தான் ராணு­வத்­துக்கு சவால் விடும் வகை­யில் ஆற்­றல் கொண்­டது என தற்­காப்பு அமைச்சு வட்­டா­ரங்­கள் தெரி­விக்­கின்­றன.

'ஆத்­ம­நிர்­பார்' என்ற திட்­டத்­தின் கீழ் உள்­நாட்டு தொழில்­நுட்­பத்தை மட்­டுமே பயன்­ப­டுத்தி போர் விமா­னங்­கள், ஏவு­க­ணை­கள், நவீன துப்­பாக்­கி­கள் ஆகி­யவை தயா­ரிக்­கப்­பட்டு, அவை இந்­திய ராணு­வத்­தில் இணைக்­கப்­பட்டு வரு­கின்­றன.

இந்­நி­லை­யில், சியாச்­சின், லடாக் உள்­ளிட்ட உய­ர­மான மலை­களை உள்­ள­டக்­கிய எல்­லைப் பகு­தி­யில் பாது­காப்பை பலப்­ப­டுத்த வேண்­டிய அவ­சி­யம் எழுந்­துள்­ளது. இதற்­காக அதிக எடை­யில்­லாத போர் விமா­னங்­கள், ஹெலி­காப்­டர்­கள் தேவைப்­படு­கின்­றன.

இதை­ய­டுத்து உள்­ளூர் நிறு­வ­னங்­கள் மூலம் அவை உற்­பத்தி செய்­யப்­ப­டு­கின்­றன.

புதி­தாக தயா­ரிக்­கப்­பட்­டுள்ள ராணுவ ஹெலி­காப்­டர் அக்­டோ­பர் 3ஆம் தேதி விமா­னப்­ப­டை­யில் சேர்க்­கப்­படும்.