புதுடெல்லி: பாஜகவுக்கு எதிரான அணியில் இடம்பெறுவது குறித்து ஆம் ஆத்மி கட்சி இன்னும் முடிவு செய்யவில்லை என அக்கட்சி யின் தலைமை ஒருங்கிணைப் பாளரும், டெல்லி முதல்வரு மான கெஜ்ரிவால் கூறியுள் ளார். மாறாக 130 கோடி இந்தியக் குடிமக்களுடன் கூட்டணி வைப்பதை இலக்காகக் கொண்டு ஆம் ஆத்மி கட்சியினர் செயல்பட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். பாஜகவுக்கு எதிராக புதிய அணியை உருவாக்கும் முயற்சியில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ஆகிய மூவரும் ஈடுபட்டுள்ளனர்.
பாஜக எதிர்ப்பு அணி: ஆம் ஆத்மி நிலைப்பாடு
1 mins read
-

