விப்ரோ நிறுவனம் அதிரடி: இரு நிறுவனங்களில் வேலை பார்த்த 300 ஊழியர்கள் பணிநீக்கம்

விப்ரோ நிறுவனம் அதிரடி: இரு நிறுவனங்களில் வேலை பார்த்த 300 ஊழியர்கள் பணிநீக்கம்

2 mins read
18b0b69f-cf73-4e3b-bbd4-6b628480664c
-

புது­டெல்லி: ஒரு நிறு­வ­னத்­தில் இருந்­த­ப­டியே, போட்டி நிறு­வ­னத்­துக்­கும் பணி­பு­ரிந்து வந்த 300 ஊழி­யர்­களை விப்ரோ தக­வல் தொழில்­நுட்ப நிறு­வ­னம் பணி­யில் இருந்து நீக்­கி­யுள்­ளது.

இந்­ந­ட­வ­டிக்கை தக­வல் தொழில்­நுட்ப நிறு­வன ஊழி­யர்­கள் மத்­தி­யில் அதிர்ச்­சி­யை­யும் விவா­தங்­க­ளை­யும் ஏற்­ப­டுத்தி உள்­ளது.

ஒரு நிறு­வ­னத்­தில் பணி­யாற்­றி­ய­ப­டியே, அதன் போட்டி நிறு­வ­னத்­துக்­கும் மறை­மு­க­மாக பணி­பு­ரி­வதை தக­வல் தொழில்­நுட்­பத் துறை­யில் 'மூன்­லைட்­டிங்' என்று குறிப்­பி­டு­கி­றார்­கள்.

இது­கு­றித்து விப்ரோ நிறு­வ­னம் கடந்த சில வாரங்­க­ளுக்கு முன்பே எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது.

இரு நிறு­வ­னங்­களில் பணி­யாற்­று­வோர் மீது உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று அவர் எச்­ச­ரித்­த­தைப் பொருட்­ப­டுத்­தாத 300 ஊழி­யர்­கள்­தான் தற்­போது பணி­நீக்­கம் செய்­யப்­பட்­டுள்­ள­னர்.

அக்­கு­றிப்­பிட்ட 300 பேரும் போட்டி நிறு­வ­னத்­துக்­கும் வேலை பார்த்து வந்­தது உறு­தி­யாகி உள்­ளது என்­றும் அவர்­கள் பணி நிய­மன விதி­மு­றை­க­ளின்­படி, நிறு­வ­னத்­திற்கு நேர்­மை­யா­க­வும் உண்­மை­யா­க­வும் இருக்க வேண்­டும் என்­பதை அப்­பட்­ட­மாக மீறி­யுள்­ள­னர் என்­றும் விப்ரோ நிர்­வா­கத் தலை­வர் ரிஷாத் பிரேம்ஜி சுட்­டிக்­காட்டி உள்­ளார்.

எனி­னும், கொரோனா நெருக்­க­டிக்­குப் பின்­னர், இது­போன்ற நிலைமை ஏற்­படும் என்­பதை யூகித்த சில நிறு­வ­னங்­கள், தங்­கள் ஊழி­யர்­கள் இவ்­வாறு இரு நிறு­வ­னங்­களில் பணி­யாற்­று­வதை அனு­ம­திக்­கின்­றன.

டெக் மஹிந்­திரா நிறு­வ­னத்­தின் தலை­வர் சிபி குரு­நானி, தனது ஊழி­யர்­கள் கூடு­தல் வரு­மா­னத்­துக்­காக இரண்­டா­வது வேலை­யைத் தேர்வு செய்­வ­தில் தனக்கு எந்­த­வித ஆட்­சே­ப­ணையும் இல்லை எனத் தெரி­வித்­துள்­ளார்.

அதே சம­யம், டிசி­எஸ் நிறு­வ­னம், ஊழி­யர்­கள் இரு இடங்­களில் பணி­யாற்­று­வதை ஒழுக்­க­மற்ற செய­லா­கப் பார்ப்­ப­தாக தெரி­வித்­துள்­ளது. இவ்­வாறு செயல்­ப­டு­வது குற்­றச்­செ­ய­லா­கக் கரு­து­வ­தாக அதன் தலை­மைச் செய­ல­தி­காரி கண­பதி சுப்­பிரம­ணி­யன் கூறி­யுள்­ளார்.

இன்­ஃபோ­சிஸ் நிறு­வ­ன­மும் தனது ஊழி­யர்­கள் போட்டி நிறு­வ­னத்­தில் மறை­மு­க­மா­கப் பணி­யாற்­று­வது தெரி­ய­வ­ரும் பட்­சத்­தில், கடும் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என எச்­ச­ரித்­துள்­ளது.

ஒரு நிறு­வ­னத்­தில் குறிப்­பிட்ட பொறுப்பை ஏற்­றுக்­கொண்டு வேலை பார்க்­கும் தக­வல் தொழில்­நுட்ப ஊழி­யர்­கள், தங்­க­ளது பணி நேரம் முடிந்த பிறகு பிற நிறு­வ­னங்­க­ளுக்கு சில மணி­நே­ரம் பணி­யாற்­றும் வழக்­கம் அதி­க­ரித்து வரு­கிறது.

இதை சில நிறு­வ­னங்­கள் அனு­மதித்­தா­லும், பெரும்­பா­லான தக­வல் தொழில்­நுட்ப நிறு­வ­னங்­கள் இந்த 'மூன்­லைட்­டிங்' ஏற்­பாட்டை முற்­றி­லு­மாக எதிர்க்­கின்­றன.

இது ஒரு மோசடி வேலை என்­றும் இந்த ஏமாற்று வேலையை ஏற்க இய­லாது என்­றும் விப்ரோ தலை­வர் அசீம் பிரேம்­ஜி­யும் தெரி­வித்­துள்­ளார்.

இந்­நி­லை­யில், விப்ரோ நிறு­வ­னம் ஊழி­யர்­களில் 300 பேரை பணி­நீக்­கம் செய்­தி­ருப்­பது பரபரப்பை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

இதுகுறித்து ஊழியர்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது.