இடுகாட்டில் பேய், பிசாசை முடக்கி ஊரைக் காக்கிறோம்

இடுகாட்டில் பேய், பிசாசை முடக்கி ஊரைக் காக்கிறோம்

5 mins read
84d08f19-a373-46b4-9e21-13df3a18e6bc
வில்லியநல்லூர் என்ற கிராமத்தில் தன் கணவர் (இடமிருந்து 2வது) பற்றி கொளஞ்சி யப்பன் சொன்னது பெரும்பாலும் சரியாகத்தான் இருந்தது என்றார் மாது. ஆனால் தன் பெயரைத் தெரிவிக்க அவர் மறுத்து விட்டார். உடன்பழக்கடை உரிமையாளர் செல்வம். -

"நாங்­கள் மகா­ராஷ்­டி­ரா­வில் இருந்து சுமார் 200 அல்­லது 300 ஆண்­டு­களுக்கு முன் தெற்கே தமிழ்­நாட்டுக்கு வந்­த­வர்­கள்," என்­கி­றார் கொளஞ்­சி­யப்­பன் என்­கிற 35 வயது குடுகுடுப்­பைக்­கா­ரர்.

மணல்­மேடு என்ற பேரூருக்கு அருகே வில்­லி­ய­நல்­லூர் என்ற கிரா­மத்­தில் குடுகுடுப்பை சத்­தம் கேட்டு, அங்கே போய் பார்த்­த­போது கொளஞ்­சி­யப்­பன் ஒரு குடும்­பத்­திற்குக் குறி சொல்­லிக்­கொண்டு இருந்­தார். அவ­ரி­டம் கொஞ்சம் பேச்சு கொடுத்­த­போது, எழுத்து வடி­வம் இல்­லாத ஒரு வகை மராத்தி மொழி­யைத் தாங்­கள் பேசு­வ­தாக அவர் கூறி­னார்.

பண்­ருட்டி, புதுப்­பேட்டை, ராஜ மன்­னார்­குடி, அரி­ய­லூர், ஆலத்­தூர், கட­லூர், நேம்­பூர், வட­லூர் உள்­ளிட்ட பல இடங்­களில் தாங்­கள் குறிப்­பி­டத்­தக்க எண்­ணிக்­கை­யில் வசிப்­ப­தா­கக் கூறிய கொளஞ்­சி­யப்­பன், "சவான், பாகோத் போன்ற பல பிரி­வு­கள் எங்­க­ளி­டம் உண்டு, நான் சவான் பிரி­வைச் சேர்ந்­த­வர்," என்­றும் தெரிவித்தார்.

வடலூர் புறநகர்ப் பகுதியில் சுமார் 70 குடும்பங்கள் வசிக்கின்றன. அவற்றில் இவரின் குடும்பமும் ஒன்று. இவரின் 12 வயது பையன் பள்ளியில் 7வது வகுப்பில் படிக் கிறார். எட்டு வயது மகள் 3வது படிக் கிறார். இவரின் மனைவி, தன் ஊருக்கு அருகே பல பகுதிகளுக்கும் சென்று சுருக்குப்பை விற்பார்.

"எங்­க­ளி­டம் மயில்­தோ­கையை வைத்­துக்கொண்டு குறி சொல்­வோர், மை வித்தை செய்­வோர், குடு­குடுப்­பையைக்­கொண்டு குறி சொல்­வோர் என பல வகை உண்டு.

"ஜக்­கம்மாதான் எங்­கள் குல தெய்­வம். வட­லூர் அருகே ஜக்­கம்மா முத்து மாரி­யம்­மன் கோயில் என்ற கோயி­லைக் கட்டி ஆடி மாதம் திரு­விழா நடத்­து­கி­றோம்.

"யுகாதிப் பண்­டி­கையைக் கொண்­டாடுவோம். வேப்பிலை, வெல்­லம் வாங்­கிச் சென்று பாகோத் பிரி­வைச் சேர்ந்­த­வர்­க­ளி­டம் ஆசிர்­வா­தம் வாங்­கிக்­கொள்­வோம். மஞ்ச பையில் வேப்­பிலை, வெல்­லத்­தைப் போட்­டுக்கொடுப்­பார்கள்.

"கொள்ளிவாய்ப் பிசாசு, பேய், உள்­ளிட்ட பயங்கர கெட்ட சக்திகள், பட்டையை உரிக்­கும் கோடை­யில் உறும நேரத்­தில் (பிற்­பகல் 1 மணி முதல் 3 மணி வரைப்­பட்ட நேரம்) இடு­காடுகளுக்கு வரும்.

"கடும் குளிர் நிலவும் மார்­கழி மாதத்­தில்­தான் அவை அதி­க­மாக அங்கு தங்கும். ஆகை­யால் நாங்­கள் மார்­கழி மாதத்­தில் மட்­டும் வெளி­யூ­ர்க­ளுக்­குப் போகா­மல் வடலூ­ருக்கு அருகே இருக்­கும் பெரிய இடு­காட்­டில் நடுச்சாமத்தில் பூசை நடத்­து­வோம்.

"ஆண்­கள் எல்­லா­ரும் அங்கு சென்று படை­யல் வைத்து சூடம் கொளுத்தி, எல்­லா­ரும் குடுகுடுப்­பையை ஒரே நேரத்­தில் அடித்து எங்­கள் ஜக்­கம்­மாவை அழைப்­போம்.

"எங்­கள் ஜக்­கம்மா வந்து எங்­களுக்கு அருள் புரி­வ­தோடு, பேய் பிசாசு போன்ற கெட்ட சக்திகள் இடு­கா­டு­களில் இருந்து வெளியே வர முடி­யா­மல் அவற்­றை அங்கேயே கட்­டிப்­போட்­டு­வி­டும்.

"ஓராண்டு காலத்­திற்கு அவை ஊருக்­குள் வர முடி­யாது. ஆகை யால் யாருக்­கும் கெடு­தல் செய்ய இயலாது. இடுகாட்டுப் படையல் முடிந்ததும் எங்களில் சிலருக்கு மண்டைஓடு, மை கிடைக்கும். அதை அவர்கள் எடுத்துக் கொள் வார்கள்," என்று கொளஞ்சியப்பன் கூறியதை எல்லாம் கேட்டபடி நின்றிருந்தேன். அவர் தொடர்ந்தார்.

"அந்த பூசை முடிந்ததும் எங்கள் ஊரைச் சுற்றிலும் உள்ள பல ஊர் களுக்கும் நள்ளிரவு நேரத்தில் சென்று வீடுவீடாக குடுகுடுப்பை யுடன் குறி சொல்வோம். பிறகு தைப்பொங்கல் அன்று எங்களுக்கு ஒவ்வொரு வீட்டினரும் பணம், துணிமணி கொடுப்பார்கள்.

"இது முடிந்ததும்தான் ஆண்கள் தொலைதூர வெளியூர்களுக்குக் கிளம்புவோம். வழியில் ஆங்காங்கே பள்ளிக்கூடங்கள், பழைய கட்ட டங்கள், புளிய மரத்தடிகள் போன்ற இடங்களில் தங்குவோம்.

"இரவில் ஜக்கம்மாவை கூப்பிட்டு அவரை வணங்கிவிட்டு பின்னிரவு 1 மணிக்குப் பிறகு புறப்பட்டு, ஊர் உள்ளே சென்று ஒவ்வொரு வீட்டிற்கும் வெளியே நின்றபடி குடுகுடுப்பையை அடித்து அந்தக் குடும்பத்திற்கான நல்லது கெட்டது பலவற்றையும் சொல்லி விட்டு செல்வோம்.

"பிறகு காலை­யில் மீண்­டும் செல்வோம். பகல் நேரத்­தி­லும் குடு குடுப்­பையை அடித்­த­படி குறி சொல்­வோம். ஆனால் இர­வில் சொல்­வது நாங்­கள் அறி­யா­மல் சொல்­வ­தாக இருக்­கும். வீடுகளில் கொடுப்பதை வாங்­கிக்­கொள்­வோம். ஒரு நாளில் ரூ.500 கிடைக்­கும். ரூ.100ம் கிடைக்கும். சொல்ல முடியாது.

"இப்­படி பிழைக்­கும் நாங்­கள் சரா­ச­ரி­யாக மாதம் ஒரு முறை எங்கள் ஊருக்­குச் சென்று குடும்­பத்தாருடன் சில நாட்­கள் இருந்து­விட்டு மீண்­டும் தொலைதூர வெளி யூர்களுக்குக் கிளம்­பு­வோம்," என்றார் குடு­கு­டுப்பை கொளஞ்­சி­யப்­பன். இவர்கள் வழக்கப்படி பெண் வீட்டார் வரதட்சணை கொடுப்பது உண்டு. ஆனால் கட்டாயம் கிடை யாது. திருமணத்தில் தாலி கிடை யாது. மணமகன் வெறும் கறுப்பு மணிதான் கட்டுவார். மணமக்கள் தலையில் எருக்கம் பூ இருக்கும்.

வீட்டில் வளரும் பூனை, அணில் போன்றவற்றைச் சாப்பிடுவார்களாம்.

கொளஞ்சி­யப்­பன் கழுத்­தில் மணிமாலை­கள் அணிந்து இருந்­தார். தாயத்து போட்டு இருந்­தார், கையில் பச்சை குத்­திக்கொண்டு இருந்­தார். மஞ்­சள்­துணி முண்­டா­சு­டன் காணப்­பட்­டார்.

குடுகுடுப்பையை அடித்துக் காட்டுங்கள் என்று கேட்டபோது அதை லாவகமாக அடித்தார்.

"குடுகுடுப்பையை முன்பு மரத்தில் குடைந்து செய்தோம்.

"இப்போது இரண்டு அங்குல பிளாஸ்டிக் குழாயை இரு புறங்களி லும் திறப்பு இருப்பதுபோல் சிறு துண்டாக வெட்டி அதை உடும்புத் தோலால் கெட்டியாக மூடி இறுக்க மாக தைத்துவிடுவோம்.

நூலில் முடியப்பட்ட சிறிய மணி இரு புறமும் அடித்து அடித்து ஒலியை எழுப்புகிறது.

"பிழைப்பு சிரமமாகிவிட்டது. வேறு தொழிலுக்கு மாறவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது. அர சாங்கத்தை அணுகி சாதி சான்றிதழ் பெற நாங்கள் படாதபாடுபட்டு வரு கிறோம். பெரும் பணம் கொடுக்க வேண்டிய நிலை இருக்கிறது.

"இதுவரை சுமார் 30 அல்லது 40 பேர் வரை சான்றிதழ் பெற்று விட்டோம். என் மகனுக்குக் கிடைத்துவிட்டது. மகளுக்கு இன்னமும் கிடைக்கவில்லை.

'இந்து கணிக்கர் எஸ்டி' என்று சான்றிதழ் கொடுத்துள்ளனர்.

"எங்களைச் சேர்ந்த சுமார் 10 பிள்ளைகள் கல்லூரிப் படிப்பு படிக் கிறார்கள்," என்று கூறிய கொளஞ் சியப்பன், தான் அறவே படிக்காதவர் என்றார்.

சொல்லிவிட்டு குடுகுடுப்பையை அடித்தபடி அந்த இடத்தைவிட்டு நகர்ந்தார் கொளஞ்சியப்பன்.

அவர் குறி சொன்ன குடும்பத் தைச் சேர்ந்த மாதைக் கேட்டபோது, இரவில் குடுகுடுப்பைக்காரர் சொன்னது ஓரளவுக்குச் சரியாகவே இருக்கிறது என்றார். இந்த மாது தன் பெயரைச் சொல்ல மறுத்து விட்டார். அருகே இருந்த செல்வம் என்ற பழக்கடைக்காரரும் அப்படியே சொன்னார்.