கருப்பை அறுவை சிகிச்சைக்குச் சென்றவரின் சிறுநீரகங்கள் நீக்கம்

கருப்பை அறுவை சிகிச்சைக்குச் சென்றவரின் சிறுநீரகங்கள் நீக்கம்

1 mins read
7ada0332-7fe0-4e4c-8cf4-450be83f2375
-

முசா­ஃபர்­பூர்: கருப்பை அறுவை சிகிச்சைக்குச் சென்ற பெண்­ணுக்­குத் தெரி­யா­ம­லேயே அவ­ரின் இரு சிறு­நீ­ர­கங்­களும் அகற்­றப்­பட்ட சம்­ப­வம் நிகழ்ந்­துள்­ளது. பீகா­ரின் முசா­ஃபர்­பூ­ரில் உள்ள ஒரு தனி­யார் மருத்­து­வ­மனை­யில் இம்­மா­தம் 3ஆம் தேதி நிகழ்ந்த இச்­சம்­ப­வம் குறித்து, 12 நாள்­களுக்­குப் பிறகே தெரி­ய­வந்­தது.

சுனிதா தேவி என்ற 30களில் இருக்கும் அப்பெண் இப்போது வேறு மருத்­து­வ­ம­னை­யில் அனு­மதிக்­கப்­பட்­டுள்­ளார். அவ­ருக்­குச் சிறு­நீ­ரக மாற்று அறுவை சிகிச்சை செய்­தாக வேண்­டும் என்­றும் சிறு­நீ­ரக தானம் செய்ய அவ­ரின் குடும்­பத்­தி­ன­ரில் யாரா­வது முன்­வர வேண்­டும் என்­றும் மருத்­து­வர்­கள் தெரி­வித்­த­னர்.

உயி­ருக்­குப் போரா­டி­வ­ரும் சுனிதா தேவிக்கு மூன்று குழந்­தை­கள் உள்­ள­னர்.

இந்­நி­லை­யில், மாநில முதல்­வர் உதவித்திட்­டத்­தின்­கீழ் தேவை­யான அனைத்து உத­வி­களும் அவ­ருக்கு வழங்­கப்­படும் என்று அர­சாங்கம் உறு­தி­ய­ளித்­துள்­ளது.