பெண் கொலை எதிரொலி; மூத்த தலைவர் பாஜகவிலிருந்து நீக்கம்

பெண் கொலை எதிரொலி; மூத்த தலைவர் பாஜகவிலிருந்து நீக்கம்

1 mins read
44339333-c85f-4acc-88b4-7958191fe26e
-

டேரா­டூன்: இளம்­பெண் கொலை­யில் தம்­மு­டைய மகன் கைது செய்­யப்­பட்­டதை அடுத்து, உத்­த­ரா­கண்ட் மாநில மூத்த பாஜக தலை­வ­ரும் முன்­னாள் அமைச்­சரு­மான வினோத் ஆர்­யா­வும் அவ­ரது இன்­னொரு மகன் அங்­கித் ஆர்­யா­வும் கட்­சி­யை­விட்டு நீக்­கப்­பட்­ட­னர்.

ரிஷி­கே­ஷில் இருந்து 10 கி.மீ. தொலை­வில் ஒரு சொகுசு விடு­தியை நடத்தி வந்­தார் வினோத் ஆர்­யா­வின் மக­னான புல்­கித் ஆர்யா.

இந்­நி­லை­யில், அங்கு வர­வேற்­பா­ள­ரா­கப் பணி­யாற்­றி­வந்த 19 வயது இளம்­பெண் கடந்த திங்­கட்­கி­ழ­மை­யி­லி­ருந்து மாய­மா­னார்.

இத­னை­ய­டுத்து, அவர் கொல்­லப்­பட்­ட­தா­கக் கூறி, அதன் தொடர்­பில் புல்­கித் ஆர்யா, விடுதி மேலா­ளர் சௌரப் பாஸ்­கர், துணை மேலா­ளர் அங்­கித் குப்தா ஆகி­யோ­ரைக் காவல்­துறை நேற்று முன்­தி­னம் கைது­செய்­தது.

அவ­ர்கள் அப்­பெண்­ணைப் பாலி­யல் தொழி­லில் தள்ள முயன்­ற­தா­கக் கூறப்படும் நிலை­யில், காவல்­துறை அதனை உறு­திப்­படுத்­த­வில்லை.

இந்­நி­லை­யில், அப்­ப­கு­தி­யில் உள்ள ஒரு கால்­வா­யில் இருந்து அந்த இளம்­பெண்­ணின் உடல் நேற்று மீட்­கப்­பட்­டது.

முன்­ன­தாக, மாநில முதல்­வர் புஷ்­கர் சிங் தாமி­யின் உத்­த­ரவை அடுத்து, நேற்று முன்­தி­னம் அந்த சொகுசு விடுதி இடித்­துத் தள்­ளப்­பட்­டது. குற்­ற­மி­ழைத்­த­வர்­கள் எவ­ராக இருப்­பி­னும் கடு­மை­யாகத் தண்­டிக்­கப்­ப­டு­வர் என்று திரு தாமி உறு­தி­ய­ளித்­துள்­ளார்.