'மின்னிலக்க நச்சு நீக்கம்' செய்யும் கிராமம்

1 mins read
d92bda07-c5f3-466e-af9a-bfcf1b31b610
-

மும்பை: மகா­ராஷ்­டிர மாநி­லம் சாங்லி மாவட்­டத்­தில் அமைந்­துள்­ளது மோஹித்­யாஞ்சே வத்­கா­வோன் எனும் கிரா­மம்.

இங்­குள்ள மக்­கள் ஒரு விந்­தை­யான பழக்­கத்தை அண்மை நாள்­க­ளா­கக் கடைப்­பி­டித்து வரு­கின்­ற­னர். அன்­றா­டம் இரவு ஏழு மணி முதல் எட்­டரை மணி வரை ஊர் முழு­வ­தும் கேட்­கும்­படி ஒரு சமிக்ஞை ஒலி ஒலிக்­கும்.

அத­னை­ய­டுத்து தொலைக்­காட்சி, கணினி, கைத்­தொ­லை­பேசி உள்­ளிட்ட மின்­னி­லக்க சாத­னங்­களை அணைத்­து­விட்டு ஊர் மக்­கள் அனை­வ­ரும் புத்­த­கம் படித்­தல், உரை­யா­டு­தல், மாண­வர்­கள் தங்­கள் சந்­தே­கங்­க­ளைப் பிற­ரி­டம் கேட்­டுத் தீர்த்­துக்­கொள்­ளு­தல் போன்ற நட­வ­டிக்­கை­களில் ஈடு­படு­கின்­ற­னர்.

யாரும் இணை­யத்­திலோ சமூக வலைத்­த­ளங்­க­ளிலோ எதை­யும் பார்ப்­ப­தில்லை. ஒன்­றரை மணி நேரத்­தின் முடி­வில் இரவு எட்­டரை மணிக்கு மீண்­டும் சமிக்ஞை ஒலி எழுப்­பப்­ப­டு­கிறது.

கிரா­மத் தலை­வர் விஜய் மோஹிதே பரிந்­து­ரைந்த இந்த யோச­னையை ஊர் மக்­கள் அனை­வரும் உவ­கை­யு­டன் பின்­பற்­று­வதாகக் கூறப்­பட்­டது.

மக்­கள் மின்­னி­லக்க நச்சு உல­கத்­தி­லி­ருந்து சற்று நேரம் விலகி ஆரோக்­கி­ய­மான நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­வ­தைக் கண்­கா­ணிக்க பகுதி வாரி­யாக குழுக்­கள் அமைக்­கப்­பட்­டி­ருப்­ப­தா­க­ கிராமத் தலைவர் கூறினார்.