அடுத்த முதல்வர்: ராஜஸ்தான் காங்கிரசில் மீண்டும் மோதல்

அடுத்த முதல்வர்: ராஜஸ்தான் காங்கிரசில் மீண்டும் மோதல்

1 mins read
cd09dcd4-47d6-4f45-aeab-b6d03359fb1b
அசோக் கெலாட் (இடது), சச்சின் பைலட். படம்: ஊடகம் -

ஜெய்ப்பூர்: ராஜஸ்­தா­னில் காங்­கிரஸ் ஆட்­சிக்கு மீண்­டும் நெருக்­கடி ஏற்­பட்­டுள்­ளது. அங்கு தற்­போது துணை முதல்­வ­ராக உள்ள சச்­சின் பைலட்டை முதல்­வ­ராக்­கு­வ­தற்கு எதிர்ப்பு கிளம்பி உள்­ளது.

ராஜஸ்­தா­னில் முதல்­வர் அசோக் கெலாட் தலை­மை­யி­லான ஆட்சி நடை­பெற்று வரு­கிறது. இந்­நி­லை­யில், அடுத்த மாதம் நடை­பெற உள்ள காங்­கி­ரஸ் கட்­சித் தலைவர் தேர்­த­லில் போட்­டி­யி­டு­கி­றார் அசோக் கெலாட்.

அத்­தேர்­த­லில் அவர் வெற்றி பெறும் பட்­சத்­தில், ராஜஸ்­தா­னில் புதிய முதல்­வர் பொறுப்­பேற்க வேண்­டி­யி­ருக்­கும். இதை­ய­டுத்து, சச்­சின் பைலட்டை முதல்­வ­ராக்க ராகுல் விரும்­பு­வ­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

ஆனால், நடப்பு முதல்­வர் அசோக் கெலாட் தரப்­பி­னர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரி­வித்­துள்­ள­தா­க­வும் 90க்கும் மேற்­பட்ட எம்­எல்­ஏக்­கள் சச்­சின் பைலட்­டுக்கு எதி­ராக வரிந்­து­கட்டி உள்­ள­தா­க­வும் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

மேலும், ராஜஸ்­தான் ஆளு­நரை நேர­டி­யா­கச் சந்­தித்து 90 எம்­எல்­ஏக்­களும் தங்­கள் பதவி வில­கல் கடி­தத்தை அளித்­தி­ருப்­ப­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது. இதை­ய­டுத்து, இரு­தரப்­பி­ன­ரை­யும் சமா­தா­னப்­ப­டுத்த காங்­கி­ரஸ் கட்­சித் தலைமை மேலி­டப் பார்­வை­யா­ளர்­களை அனுப்பி வைத்­துள்­ளது. அடுத்த ஓரிரு தினங்களில் இப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என காங்கிரஸ் மேலிட வட்டாரங்கள் தெரிவித்தன.