தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காஷ்மீரில் அழுகும் நிலையில் ரூ.100 கோடி மதிப்புள்ள ஆப்பிள்கள்; விவசாயிகள் கவலை

1 mins read
4d64665a-3e19-48cf-805d-66707642e020
-

ஸ்ரீந­கர்: நெடுஞ்­சாலை சீர­மைப்­புப் பணி­கள் கார­ண­மாக காஷ்­மீ­ரில் விளை­யும் ஆப்­பிள்­களை நாட்­டின் பிற பகு­தி­க­ளுக்கு கொண்டு செல்­வது தடை­பட்­டுள்­ளது.

தற்­போது காஷ்­மீர் நெடுஞ்­சா­லை­களில், காஷ்­மீர் ஆப்­பிள்­க­ளு­டன் சுமார் எட்­டா­யி­ரத்­துக்­கும் மேற்­பட்ட சரக்கு வாக­னங்­கள் வரி­சை­யில் காத்­துக்­கி­டக்­கின்­றன.

சாலைப் பணி­கள் தொடர்ந்து நடை­பெற்று வரு­வ­தால் இந்த வாக­னங்­கள் முன்­னே­றிச் செல்ல முடி­ய­வில்லை. இத­னால் அவற்­றில் ஏற்­றப்­பட்­டுள்ள சுமார் நூறு கோடி ரூபாய் (S$17.6 மில்­லி­யன்) மதிப்­புள்ள ஆப்­பிள்­கள் அழுகி பய­னற்­றுப் போகும் நிலை ஏற்­பட்­டுள்­ளது என காஷ்­மீர் பள்­ளத்­தாக்கு பழ உற்­பத்தி­யா­ளர்­கள், வியா­பா­ரி­கள் சங்­கம் கவலை தெரி­வித்­துள்­ளது.

பழ உற்­பத்தி தொடர்­பான நட­வடிக்­கை­களில் சுமார் மூன்று மில்­லி­யன் பேர் ஈடு­பட்­டுள்­ள­னர். அவர்­களின் பொரு­ளா­தார நிலை இந்த வேலையை நம்­பியே உள்­ளது.

இந்­நி­லை­யில் நெடுஞ்­சாலை, போக்­கு­வ­ரத்து மேலாண்­மை­யில் காஷ்­மீர் நிர்­வா­கம் அலட்­சி­ய­மாக இருந்­து­விட்­ட­தாக குற்­றம்­சாட்டி விவ­சா­யி­கள் கடந்த ஞாயிறு, திங்­கட்­கி­ழ­மை­களில் போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர். இதன் கார­ண­மாக காஷ்­மீர் பள்­ளத்­தாக்­கில் இயங்கி வரும் பத்து முக்­கியப் பழச் சந்­தை­கள் மூடப்­பட்­டி­ருந்­தன.

நடப்­பாண்­டில் காஷ்­மீர் பள்­ளத்­தாக்­குப் பகு­தி­யில் பலத்த மழை பெய்­த­தன் கார­ண­மாக, அங்கு 2.1 மில்­லி­யன் மெட்­ரிக் டன் ஆப்­பிள்­கள் உற்­பத்­தி­யாகி உள்ள நிலை­யில், போக்­கு­வ­ரத்து பாதிப்பு கார­ண­மாக விவ­சா­யி­கள் பெரும் இழப்பை எதிர்­நோக்கி உள்­ள­தாக தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.