சிம்லா: சிறிய ரகப் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஏழு பேர் மாண்டனர். இத்துயரச் சம்பவம் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள குலு எனும் இடத்தில் நிகழ்ந்தது.
மாண்டவர்களில் மூன்று பேர் கல்லுாரி மாணவர்கள் என்றும் ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாகவும் தெரிய வந்துள்ளது. இருவர் மருத்துவமனையில் உயிரிழந்தனர்.
காயம் அடைந்த பத்துப் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இமாச்சல பிரதேச முதல்வர் ஜெய் ராம் தாக்கூர் விபத்தில் பலியானவர்கள் குடும்பத்தாருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

