ஸ்ரீநகர்: காங்கிரஸ் கட்சியில் இருந்து அண்மையில் விலகிய குலாம் நபி ஆசாத், ஜனநாயக ஆசாத் கட்சி என்ற பெயரில் புதுக்கட்சி தொடங்கி உள்ளார். மேலும், கட்சிக் கொடியையும் அவர் அறிமுகம் செய்தார்.
பின்னர் தம் ஆதரவாளர் கள் மத்தியில் பேசிய அவர், ஜனநாயகம், அமைதி, சுதந்திரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் கட்சிப்பெயர் அமைய வேண்டும் என்பதை மனத்தில் கொண்டு இந்தப் பெயரைத் தேர்வு செய்ததாக அவர் குறிப்பிட் டார். இதனால் காங்கிரஸ் கட்சிக்குக் கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

