இந்தியாவில் ஊதிய விகிதம் 10.4% உயரும்

இந்தியாவில் ஊதிய விகிதம் 10.4% உயரும்

2 mins read
9e346815-cdd7-4dfe-aa32-c646c9e9a6e2
-

'ஆன் இந்தியா' ஆய்வறிக்கையில் தகவல்

புது­டெல்லி: இந்­தி­யா­வில் அடுத்த ஆண்டு ஊதிய விகி­தங்­கள் 10.4 விழுக்­காடு அதி­க­ரிக்­கும் என அண்­மைய கணிப்­பில் தெரிய வந்­துள்­ளது.

மந்­த­நி­லை­யும் உள்­நாட்­டுப் பண­வீக்­க­மும் நில­வி­னா­லும், இந்­தி­யா­வில் நடப்பு 2022ஆம் ஆண்டு ஊதிய விகி­தம் 10.6 விழுக்­கா­டாக உள்­ளது. இது கடந்த பிப்­ர­வரி மாதம் கணிக்­கப்­பட்ட 9.9% அதி­க­ரிப்­பை­விட சற்று கூடு­த­லா­கும்.

வரு­மான உயர்வு குறித்த 'ஆன் இந்­தியா'வின் 28வது ஆண்டு ஆய்வு அறிக்கை அண்­மை­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அதில் பல்­வேறு முக்­கிய விவ­ரங்­கள் இடம்­பெற்­றுள்­ளன.

இந்­தி­யா­வில் மின் வணி­கத்­து­றையானது, அடுத்த ஆண்­டில் 12.8% ஊதிய உயர்­வு­டன் உல­கச் சந்­தை­யில் முன்­னிலை வகிக்­கும் என்­றும் அதற்கு அடுத்த இடத்­தில் 12.7% ஊதிய உயர்­வு­டன் துளிர் (ஸ்டார்ட் அப்) நிறு­வ­னங்­கள் இடம்­பெ­றும் என்­றும் திங்­கட்­கி­ழமை வெளி­யான ஆய்­வ­றிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

நாற்பதுக்கும் மேற்பட்ட தொழில்துறைகளில் இருக்கும் 1,300 நிறுவனங்களின் தரவுகளைப் பகுப்பாய்வு செய்து ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

அதில் குறிப்பிடப்பட்டுள்ள கணிப்புகளின் அடிப்படையிலான போக்கு அடுத்த சில மாதங்கள் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

"இப்போது மட்டுமல்லாமல் எதிர்காலத்திலும் தங்கள் ஊழியர்கள் நிறுவனத்துக்கு ஆதரவாக இருப்பதையும் நிறுவனத்தின் மீது நம்பிக்கை கொண்டிருப்பதையும் நிறுவனத் தலைவர்கள் உறுதி செய்ய வேண்­டும்.

"இதற்­கேற்ப முடி­வு­கள் எடுக்­கப்­பட வேண்­டும். மேலும், நிறு­வ­னத் தலை­வர்­கள் தங்­க­ளு­டைய மொத்த பயன்­களை மறு­ப­ரி­சீ­லனை செய்ய வேண்­டும்," என 'ஆன் இந்­தியா' ஆய்­வ­றிக்­கை­யில் அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

ஹை-டெக், தக­வல் தொழில்­நுட்­பம் ஆகிய துறை­களில் 11.3%, நிதி நிறு­வ­னங்­கள், அமைப்­பு­களில் 10.7% அள­வில் ஊதிய உயர்வு இருக்­கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

ஊதி­யம் மீதான அழுத்­தம் மேலும் சில காலம் நீடிக்­கும் என்ற போதி­லும், அனைத்து துறை­க­ளி­லும் ஊதி­யம் அதி­க­ரிக்­கும் என்­பதே நிச்­ச­ய­மான தக­வல் என்று 'ஆன் இந்­தியா' தனது ஆய்­வ­றிக்­கை­யில் மேலும் குறிப்­பிட்­டுள்­ளது.

ஊதிய உயர்வு குறித்த இந்த தக­வல்­கள் தனி­யார் துறை­யில் பணி­யாற்­று­வோர்க்கு புதிய நம்­பிக்­கையை அளித்­துள்­ளது என்­கி­றார்­கள் பொரு­ளி­யல் நிபு­ணர்­கள்.