கர்நாடகாவில் விவசாயிகள் போராட்டம்

கர்நாடகாவில் விவசாயிகள் போராட்டம்

1 mins read
e616ab5f-02a4-45ab-8b65-6859c1917728
-

பெங்­க­ளூரு: கர்­நா­ட­கா­வில் பல்­வேறு கோரிக்­கை­களை வலி­யு­றுத்தி நடை­பெற்ற பேர­ணி­யின்­போது காவல்­து­றை­யி­ன­ருக்­கும் விவ­சா­யி­களுக்கும் இடையே தள்­ளு­முள்ளு ஏற்­பட்­டது.

இதை­ய­டுத்து, நூற்­றுக்­க­ணக்­கான விவ­சா­யி­கள் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர்.

விளை­பொ­ருள்­க­ளுக்கு குறைந்­த­பட்ச ஆத­ரவு விலை, விவ­சாய உப­ர­க­ணங்­கள் மீதான ஜிஎஸ்­டியை நீக்­கு­தல், அனைத்து வகைப் பயிர்­க­ளுக்­கும் காப்­பீட்­டுத் தொகை வழங்க வேண்­டும் உள்­ளிட்ட பல்­வேறு கோரிக்­கை­களை முன்­வைத்து விவ­சா­யி­கள் போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர்.

நேற்று முன்­தி­னம் நடை­பெற்ற இந்­தப் பேர­ணி­யில் தமி­ழ­கம், பஞ்­சாப், ஹரி­யானா, ராஜஸ்­தான் உள்ளிட்ட மாநி­லங்­களில் இருந்­தும் விவ­சா­யி­கள் திர­ளா­கப் பங்­கேற்­றனர்.

இதை­ய­டுத்து கர்­நா­டக மாநில தலை­மைச் செய­ல­கம் நோக்கி விவ­சா­யி­கள் பேர­ணி­யா­கச் சென்­ற­போது காவல்­து­றை­யி­னர் தடுத்து நிறுத்­தி­னர். பேரணி நடத்­து­வ­தைக் கைவிட காவல்­துறை வலி­யு­றுத்­தி­யதை விவ­சா­யி­கள் ஏற்க மறுத்து வாக்­கு­வா­தத்­தில் ஈடு­பட்­ட­னர்.

சிறிது நேரத்­தில் வாக்­கு­வா­தம் முற்­றி­யதை அடுத்து, இரு­த­ரப்­பி­ன­ருக்­கும் இடையே தள்­ளு­முள்ளு ஏற்­பட்­டது. இதை­ய­டுத்து, பேர­ணி­யில் பங்­கேற்ற விவ­சா­யி­கள் அனை­வ­ரும் கைது செய்­யப்­பட்­ட­னர்.

முன்­ன­தாக, அதி­பர் திரௌ­பதி முர்மு பெங்­க­ளூ­ருக்கு வரும்­போது அவ­ருக்கு எதிர்ப்பு தெரி­விப்­ப­தற்­காக இந்­தப் பேரணி நடத்­தப்­ப­டு­கிறது என்று வெளி­யான தக­வலை விவ­சாய சங்க நிர்­வா­கி­கள் திட்­ட­வட்­ட­மாக மறுத்­த­னர்.