திருவனந்தபுரம்: 'பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா' அமைப்புடன் தொடர்புடைய இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள் நேற்றும் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
எட்டு மாநிலங்களில் நடைபெற்ற சோதனை நடவடிக்கையின்போது, நூற்றுக்கும் மேற்பட்டோர் கைதானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வியாழக்கிழமை 15 மாநிலங்களில் 'பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா' அமைப்புடன் தொடர்புள்ள இடங்களில் தேசிய புலனாய்வு முகமை, அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடிச் சோதனையின் போது நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
பயங்கரவாத இயக்கங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்தது, நிதி வசூலித்தது, மத மோதல்களை ஊக்குவிக்க முயன்றது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்தச் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதற்கிடையே, வளைகுடா நாடுகளில் இருந்து உண்டியல் முறையில் இந்த அமைப்பு நிதி வசூலித்துள்ளது. இதற்காக, அபுதாபி நகரிலுள்ள உணவகத்தைப் பயன்படுத்தி உள்ள னர் என்று அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

