தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

'பிஎஃப்ஐ' அமைப்புக்கு ஐந்து ஆண்டு தடை

2 mins read
d2cba513-6ea1-4113-a79e-e91b54b2754a
-

புது­டெல்லி: 'பிஎ­ஃப்ஐ' எனப்­படும் பாப்­பு­லர் ஃபிரண்ட் ஆஃப்் இந்­தியா அமைப்பு இந்­தி­யா­வில் செயல்­பட ஐந்து ஆண்­டுக் காலம் தடை விதித்து மத்­திய உள்­துறை அமைச்சு உத்­த­ர­விட்­டுள்­ளது.

இந்­தத் தடை உத்­த­ரவு உட­ன­டி­யாக அம­லுக்கு வரு­வ­தா­க­வும், பிஎ­ஃப்­ஐ­யின் துணை அமைப்­பு­க­ளுக்­கும் இது பொருந்­தும் என்­றும் இந்­திய அரசு கூறி­யது.

பிஎஃப்ஐயும் அதன் துணை அமைப்­பு­களும் சட்­ட­வி­ரோ­த­மா­னவை என்று உள்­துறை அமைச்சு அறி­வித்­துள்­ளது.

முன்­ன­தாக, பயங்­க­ர­வா­தச் செயல்­களில் ஈடு­ப­டு­வ­தற்­கும், மதத்­தின் அடிப்­ப­டை­யில் பகை­மையை வளர்ப்­ப­தற்­கும் பயிற்சி முகாம்­களை நடத்­தி­ய­தாக பிஎஃப்ஐக்கு எதி­ரான வழக்கு தொடர்­பாக தமிழ்­நாடு, தெலுங்­கானா, ஆந்­தி­ரப் பிர­தே­சம் உள்­பட நாடு முழு­வ­தும், இம்­மாதம் 22ஆம் தேதி தேசி­யப் புல­னாய்வு அமைப்பு அதி­கா­ரி­கள் சோதனை நடத்­தி­னர். நேற்று முன் தினம் இரண்­டா­வது முறை­யாக சோதனை நடத்­தப்­பட்­டது.

கிட்­டத்­தட்ட 93 இடங்­களில் தேசிய புல­னாய்வு அமைப்­பும் அம­லாக்­கத்­து­றை­யும் இணைந்து சோதனை நடத்­தின. இந்­தச் சோத­னை­க­ளின்­போது பல்­வேறு சர்ச்­சைக்­கு­ரிய ஆவ­ணங்­கள், பணம், மின்­னி­லக்­கக் கரு­வி­கள் ஆகி­யவை கைப்­பற்­றப்­பட்­டன. மேலும் பிஎ­ஃப்ஐ அமைப்­பைச் சேர்ந்த 247 பேர் கைது செய்­யப்­பட்­ட­னர்.

இந்­நி­லை­யில், பிஎஃப்ஐ அமைப்பின் இணை­யத்­த­ளத்­தை­யும் மத்­திய அரசு முடக்­கி­யுள்­ளது.

பிஎ­ஃப்­ஐ­யின் டுவிட்­டர், யூடி­யூப், இன்ஸ்­ட­கி­ராம் உள்­ளிட்ட சமூக வலைத்­த­ளக் கணக்­கு­க­ளை­யும் முடக்க உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது. பிஎ­ஃப்ஐ அமைப்­பின் மாண­வர் பிரி­வான 'கேம்­பஸ் ஃபிரண்ட் ஆஃப் இந்­தியா'வின் தலை­வர் திரு இம்­ரான், இது அர­சி­யல்­ரீ­தி­யான பழி­வாங்­கும் நட­வ­டிக்கை என்று கூறி­ய­து­டன், இந்த ஐந்­தாண்­டுத் தடை எனும் சவா­லைச் சமா­ளித்து அதன் முடி­வில் புதிய சித்­தாந்­தத்­து­டன் மீண்­டு­வ­ரு­வோம் என்று கூறி­னார்.

பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கை­களில் பிஎ­ஃப்ஐ ஈடுபடவில்லை என்று மறுத்த இம்­ரான், தடையை எதிர்த்து நீதி­மன்­றத்­தில் வழக்குத் தொடுப்­பது பற்­றி­யும் பரி­சீ­லிக்­கப்­படும் என்­றார். ஆனால், பயங்­க­ர­வா­தம், அதற்கு நிதி­யு­தவி செய்­தல், மோச­மான தாக்­கு­தல்­கள், அர­ச­மைப்­புச் சட்­டத்தை அவ­ம­தித்­தல் போன்ற சட்­ட­வி­ரோ­தச் செயல்­களில் பிஎஃப் ஐயும் அதன் துணை அமைப்­பு­களும் ஈடு­ப­டு­வ­தா­க மத்திய அரசு குற்­றம்­சாட்­டுகிறது.

சோத­னை­யில் கைப்­பற்­றப்­பட்ட பொருள்­களில், எளி­தில் கிடைக்­கும் பொருள்­களைப் பயன்­ப­டுத்தி வெடி­குண்டு தயா­ரிப்­ப­தற்­கான வழி­காட்­டிக் கையே­டு­கள் இருப்­ப­தா­கப் புல­னாய்வுத் துறை கூறியது.

உட­ன­டி­யா­கத் தடை விதிக்­கப்­படா­விட்­டால், பிஎ­ஃப்ஐ அமைப்பு தனது நாச­வே­லை­ நட­வ­டிக்­கை­களைத் தொட­ரும்; பொது ஒழுங்­கைச் சீர்­கு­லைக்­கும் என்று கூறிய மத்­திய அரசு, உ.பி., கர்­நா­டகா, குஜ­ராத் மாநில அர­சு­கள் இவ்­வாறு தடை­செய்­யப் பரிந்­துரைத்­த­தா­க­வும் தெரி­வித்­துள்­ளது.

இதற்கிடையே கேரளாவில் ஆளும் சிபிஐ(எம்) கட்சியினர், பீகாரின் முன்னாள் முதல்வர் லல்லு பிரசாத் யாதவ் போன்றோர் 'ஆர் எஸ்எஸ்' அமைப்பையும் இதேபோல் தடைசெய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.