ரூ.500 வாடகை செலுத்தினால் ஒருநாள் சிறை அனுபவம்

ரூ.500 வாடகை செலுத்தினால் ஒருநாள் சிறை அனுபவம்

1 mins read
3ce01669-82d7-4a92-97e2-bc9fb0873b76
-

ஹல்த்­வானி: உத்­த­ர­காண்ட் மாநி­லம் ஹல்த்­வா­னி­யில் உள்ள சிறைச்­சா­லை­யின் நிர்­வா­கம் விந்­தை­யான ஒரு சிறப்­புத் திட்­டத்தை அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்­ளது.

இதன்­கீழ், பொது­மக்­கள் யார் வேண்­டு­மா­னா­லும் ரூ.500 செலுத்­தி­னால், ஒரு பகல், ஓர் இரவு சிறைச்­சா­லை­யில் கைதி­கள்­போலத் தங்­கி­யி­ருக்­க­லாம். கைதி­களுக்­கான ஆடை­களும் அங்­குள்ள உண­வுக்­கூ­டத்­தில் தயா­ரான உண­வும் வழங்­கப்­படும்.

முத­லில் சோதிட ரீதி­யில் சிறை செல்­லக்­கூ­டு­மெ­னக் கூறப்­பட்­ட­தால் கலங்­கி­யோ­ருக்­காக இதைத் திட்­ட­மிட்ட அதி­கா­ரி­கள், தற்­போது பொது­மக்­கள் அனை­வ­ரும் பயன்­படுத்­திக்கொள்­ள­லாம் என்று கூறி­யுள்­ள­னர். இத­னால் அர­சுக்கு வரு­மா­னம் கிடைக்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.