அகமதாபாத்: குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரில் நேற்று மாலை, 36வது தேசிய விளையாட்டுப் போட்டிகளைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்.
கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இந்தப் போட்டிகளில் நாடு முழுவதும் இருந்து 7,000 விளையாட்டாளர்கள், பல்வேறு போட்டிகளில் பங்குபெறுகின்றனர்.
அடுத்த மாதம் 12ஆம் தேதி வரை மொத்தம் 36 வகையான போட்டிகள் நடைபெறுகின்றன.

