உதம்பூர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் உதம்பூர் நகரில் இரு இடங்களில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகளில் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ளன.
பேருந்து நிலையத்தில் நேற்று நிகழ்ந்த சம்பவத்தில் யாருக்கும் காயமில்லை. ஆனால் வாகனம் பலத்த சேதமடைந்தது.டோமெயில் சௌக் பகுதியில் நேற்று முன்தினம் நடந்த குண்டுவெடிப்பில் இருவர் காயமடைந்தனர்.

