ரயில் தண்டவாளம் கடப்பு: அன்றாடம் ஐந்து மரணங்கள்

ரயில் தண்டவாளம் கடப்பு: அன்றாடம் ஐந்து மரணங்கள்

1 mins read
c6a74f48-85da-4f36-b868-2b76e4181800
இந்தியாவில் கண்டபடி ரயில் தண்ட வாளத்தில் நடந்து செல்லும் போக்கு பரவலாக நாடு முழுவதும் காணப் படுகிறது. படம்: ஊடகம் -

2021ல் நிகழ்ந்த 1,550 விபத்துகளில் 1,807 பேர் பலி; உத்தரப் பிரதேசத்தில் ஆக அதிகம்

புது­டெல்லி: இந்­தி­யா­வில் ரயில் தண்­ட­வா­ளங்­க­ளைக் கடந்து செல்­லும்­போது நாள் ஒன்­றுக்குச் சரா­சரி­யாக ஐந்து பேர் ரயில்­களில் அடி­பட்டு மர­ண­ம­டை­கி­றார்­கள் என்­பது தெரி­ய­வந்­துள்­ளது.

சென்ற ஆண்­டில் இத்­த­கைய 1,550 விபத்­து­கள் நிகழ்ந்­த­தா­க­வும் அவற்­றில் குறைந்­த­பட்­சம் 1,807 பேர் கொல்­லப்­பட்­டு­விட்­ட­தா­க­வும் அர­சாங்க புள்­ளி­வி­வ­ரங்­கள் மூலம் தெரி­ய­வந்து இருப்­ப­தாக சிஎன்என்-நியூஸ்18 தெரி­வித்து உள்­ளது.

உத்­த­ரப் ­பி­ர­தே­சம், மத்­தி­யப் பிர­தே­சம், மேற்கு வங்­கா­ளம், பீகார், ஹரி­யானா, ஜார்­க்கண்ட், கேரளா ஆகிய மாநி­லங்­களில் மொத்­தம் 97 விழுக்­காட்டு விபத்­து­கள் நிகழ்ந்து இருக்­கின்­றன.

எஞ்­சிய இடங்­களில் நிகழ்ந்த அத்­த­கைய 54 விபத்­து­களில் 55 பேர்­ மாண்­ட­னர்.

உத்­த­ரப்­ பி­ர­தே­சத்­தில் மட்­டும் 575 விபத்­து­கள் நிகழ்ந்­த­தா­க­வும் மொத்­தம் 875 பேர் கொல்­லப்­பட்­ட­தா­க­வும் தெரி­ய­வ­ரு­கிறது.

அத்­த­கைய விபத்து­கள் அதி­க­மாக நிக­ழும் மாநி­லங்­களில் இரண்­டா­வது இடத்­தில் மத்­தி­யப் பிர­தே­சம் இருக்­கிறது.

ரயில் தண்­ட­வா­ளத்தைக் கடக்­கும்­போது வேக­மாக ரயில் வரு­வதைக் கவ­னிக்­கா­மல் பொது­மக்­கள் அலட்­சி­ய­மாக செயல்­ப­டு­வதே இத்­த­கைய விபத்­துக்­கான பொது­வான கார­ணம் என்று தெரி­விக்­கப்­படு­கிறது. தடுப்பு இல்லாத கடப்புகளில் இத்தகைய விபத்துகள் அதிகமாக நிகழ்கின்றன.