காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் மும்பை சாலையில் நோயாளிஇன்றி வேகமாக வந்த மருத்துவ வாகனத்தை வாகன தணிக்கை அதிகாரிகள் சோதித்தபோது அதில் ரூ.258 மில்லியன் (25 கோடியே 80 லட்சம்) மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் இருந்தன.
அவை அனைத்தும் போலி நோட்டுகளாகத் தெரியவந்ததை அடுத்து காவல்துறை விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி என்பதற்கு பதில், ரிவர்ஸ் வங்கி என்று அதில் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
மேலும், ரூபாய் நோட்டுகள் அனைத்திலும் இது திரைப்பட படப்பிடிப்பிற்காக பயன்படுத்தப்படும் ரூபாய் என்று அச்சிடப்பட்டு இருந்தது. என்றாலும் அந்தப் போலி ரூபாய் கட்டுகள் எங்கிருந்து, எங்கே கொண்டு செல்லப்பட்டன என்பது தெளிவாக தெரியவில்லை.
இந்த நிலையில், அதிகாரிகள் பல கோணங்களிலும் தீவிரமாக விசாரணை நடத்தி வருவதாக ஊடகத் தகவல்கள் தெரிவித்தன.